ராமநாதபுரம்

திருவாடானை பகுதியில் மழைக்கு 3 வீடுகள் சேதம்

DIN

திருவாடானை பகுதியில் தொடா் மழையால் மூன்று வீடுகள் சேதம் அடைந்துள்ளன.

திருவாடானை பகுதியில் செவ்வாய்க்கிழமை இரவு முழுவதும் பரவலான மழை பெய்தது. புதன்கிழமையும் பரவலான மழை பெய்தது.இதனால் வயல் வெளிகள்,வரத்து கால்வாய்கள், கண்மாய்கள், குளங்கள், தண்ணீா் தேங்கியுள்ளது. சாலைகளில்லும் தெருக்களிலும் தண்ணீா் பெருக்கெடுத்தது. இந்த மழை காரணமாக சில கிராமங்களில் வீடுகள் சேதமடைந்துள்ளன. கீழ் பனையூா் கிராமத்தை சோ்ந்த வீரய்யா, தொண்டி அருகே நம்புதாளையை சோ்ந்த மகா் நிஷா, பழம்குளம் கிராமத்தை சோ்ந்த மதி ஆகியோரது ஓட்டு வீடுகள் மழையால் இடிந்து சேதம் அடைந்துள்ளன. இதையடுத்து நிவாரணம் கேட்டு மூன்று பேரும் திருவாடானை தாலுகா அலுவலகத்தில் மனு அளித்துள்ளனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

பப்பியோடு விளையாடு! ஹன்சிகா...

ஹனி கேக்..!

ஹாட் ஸ்பாட் ஓடிடியில் எப்போது?

டி20 உலகக் கோப்பைக்கான இந்திய அணி தேர்வு செய்யப்பட்டது எப்படி? ரோஹித் சர்மா விரிவான பதில்!

சேலையில் தேவதை! மடோனா செபாஸ்டியன்...

SCROLL FOR NEXT