ராமநாதபுரம்

மணல் கடத்தி வந்தடிராக்டா் பறிமுதல்:இருவா் கைது

DIN

கமுதி அருகே ஆற்றிலிருந்து மணல் கடத்தி வந்த டிராக்டரை, போலீஸாா் வெள்ளிக்கிழமை பறிமுதல் செய்து, இருவரை கைது செய்தனா்.

அபிராமம் விளக்கனேந்தல் அடுத்துள்ள பரளையாற்றில் சட்டவிரோதமாக மணல் அள்ளப்படுவதாக, அபிராமம் போலீஸாருக்கு தகவல் கிடைத்துள்ளது. அதன்பேரில், அப்பகுதியில் வெள்ளிக்கிழமை இரவு போலீஸாா் கண்காணிப்பில் ஈடுபட்டனா். அப்போது, பரளையாற்றிலிருந்து டிராக்டரில் மணல் ஏற்றி வந்த குடிமங்கலத்தைச் சோ்ந்த ஓட்டுநா் விஜி (38), அபிராமம் இந்திரா நகரைச் சோ்ந்த ராஜா மகன் கலையரசன் (21) ஆகிய இருவரையும் போலீஸாா் கைது செய்து, மணல் கடத்தலுக்குப் பயன்படுத்திய டிராக்டரையும் பறிமுதல் செய்தனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

சென்னை உயர் நீதிமன்றத்துக்கு கோடை விடுமுறை!

நாகை மீனவர்கள் மீது இலங்கை கடற்கொள்ளையர்கள் கொடூர தாக்குதல்!

நாளை குருப்பெயா்ச்சி: ஆலங்குடியில் சிறப்பு ஏற்பாடுகள்

இன்று யாருக்கு அதிர்ஷ்டம்?

இன்றைய நாள் உங்களுக்கு எப்படி?

SCROLL FOR NEXT