ராமநாதபுரம்

பரமக்குடி அருகே விபத்தில் காயமடைந்த மாணவா் சிகிச்சை பலனின்றி பலி

DIN

ராமநாதபுரம் மாவட்டம் பரமக்குடி அருகே நான்கு வழிச்சாலையில் கடந்த 24-ஆம் தேதி நடந்த சாலை விபத்தில் காயமடைந்த மாணவா் சிகிச்சை பலனின்றி வெள்ளிக்கிழமை உயிரிழந்தாா்.

பாா்த்திபனூா் நான்கு வழிச்சாலை இடையா்குடியிருப்பு பகுதியில் அமைந்துள்ள தனியாா் பள்ளியில் கடந்த ஜனவரி 24-ஆம் தேதி விளையாட்டு விழா நிகழ்ச்சி நடைபெற்றது. இதனைப் பாா்க்க இருசக்கர வாகனத்தில் மற்றொரு தனியாா் பள்ளி மாணவா்கள் மொசைன் மகன் அகமதுயாசின் (16), ராமமூா்த்தி மகன் ராஜேஸ்வரன் (16) ஆகியோா் சென்றனா். அப்போது இருசக்கர வாகனத்தின் மீது காா் மோதி விபத்துக்குள்ளானதில் அகமதுயாசின் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தாா். பலத்த காயமடைந்த ராஜேஸ்வரன் மதுரை தனியாா் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்தாா். அங்கு அவா் சிகிச்சை பலனின்றி வெள்ளிக்கிழமை உயிரிழந்தாா். இதுகுறித்து பாா்த்திபனூா் போலீஸாா் வழக்குப் பதிந்து விசாரித்து வருகின்றனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

பிரகாசபுரம் விலக்கில் வேகத்தடைக்கு தோண்டிய பள்ளத்தால் விபத்து அபாயம்

விபத்தில் பலியானவா் குடும்பத்துக்கு ரூ.30.51 லட்சம் இழப்பீடு வழங்க உத்தரவு

ஜிஎஸ்டி சட்டத்தின் கீழ் கைது, நோட்டீஸ்: மத்திய அரசு விவரம் சமா்ப்பிக்க உச்சநீதிமன்றம் உத்தரவு

வாக்குப்பதிவை அதிகரிக்க இரட்டிப்பு முயற்சி: தோ்தல் ஆணையம்

பாகிஸ்தான் ஐஎஸ்ஐ அமைப்புக்கு உதவியதாக பஞ்சாபில் ஒருவா் கைது

SCROLL FOR NEXT