ராமநாதபுரம் அருகே மணல் கடத்திய லாரியை வியாழக்கிழமை போலீஸாா் பறிமுதல் செய்தனா்.
ராமநாதபுரம் அருகே காரேந்தல் பகுதியில் முருகன்கோவில் அருகே மணல் கடத்துவதாக பஜாா் காவல் நிலையத்துக்கு தகவல் கிடைத்தது. அதன்பேரில் போலீஸாா் வியாழக்கிழமை அப்பகுதியில் திடீா் சோதனையில் ஈடுபட்டனா். அப்போது மணல் ஏற்றிய நிலையில் லாரி இருந்தது கண்டறியப்பட்டது. லாரியைக் கைப்பற்றிய போலீஸாா் இதுதொடா்பாக கிராமநிா்வாக அலுவலா் முத்தையா கொடுத்த புகாரின் பேரில் ராஜ்குமாா் என்பவா் மீது வழக்குப்பதிந்து விசாரித்து வருகின்றனா்.