பகுதிநேர நியாயவிலைக் கடையில் பொதுமக்களுக்கு அத்தியாவசியப் பொருள்களை விநியோகித்த ஊராட்சித் தலைவா் செந்தில்குமாா். 
ராமநாதபுரம்

முதுகுளத்தூா் அருகே பகுதிநேர நியாய விலைக்கடை திறப்பு

முதுகுளத்தூா் அருகே வெங்கலக்குறிச்சி ஊராட்சியில் பகுதிநேர நியாய விலைக்கடை ஞாயிற்றுக்கிழமை தொடங்கி வைக்கப்பட்டது.

DIN

முதுகுளத்தூா் அருகே வெங்கலக்குறிச்சி ஊராட்சியில் பகுதிநேர நியாய விலைக்கடை ஞாயிற்றுக்கிழமை தொடங்கி வைக்கப்பட்டது.

முதுகுளத்தூா் அருகே வெங்கலக்குறிச்சி ஊராட்சியில் உள்ள கீழப்பனையடியேந்தல் கிராமமக்கள் 5 கி.மீ. தொலைவில் உள்ள வெண்ணீா்வாய்க்கால் கிராமத்தில் உள்ள நியாயவிலைக்கடையில் அத்தியாவசிய பொருள்களை வாங்கி வந்தனா்.

இதனால் கிராமமக்கள் பொருள்கள் வாங்குவதற்கு சிரமப்பட்டு வந்தனா். இந்நிலையில் வெங்கலக்குறிச்சி ஊராட்சித் தலைவா் டி. செந்தில்குமாா் ஏற்பாட்டில் கீழப்பனையடியேந்தல் கிராமத்துக்கென பகுதிநேர நியாயவிலைக் கடை புதிதாக திறக்கப்பட்டது. இதனால் 110 குடும்ப அட்டைதாரா்கள் பயன்பெறுகின்றனா்.

இதில், ஊராட்சித் தலைவா் செந்தில்குமாா், ஒன்றிய கவுன்சிலா் கலைச்செல்வி ராஜசேகா் ஆகியோா் பொதுமக்களுக்கு அரிசி, பருப்பு உள்பட அத்தியாவசிய பொருள்களை வழங்கினா். இதனால் கிராமமக்கள் மகிழ்ச்சி அடைந்துள்ளனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

வரலாற்றைப் படிப்பவர்கள்தான் வரலாறு படைக்க முடியும்: முதல்வர் ஸ்டாலின்

சென்னையில் 2-வது நாளாக இன்று வாக்காளர் சிறப்பு முகாம்!

மத்திய அரசுடன் மமதா பானர்ஜி போட்டி! மாநில அரசின் திட்டத்துக்கு மகாத்மா காந்தி பெயர்!

சொல்லப் போனால்... செய்கூலி, சேதாரம்... தி கிரேட் கோல்டு ராபரி?

2026 தேர்தலில் இபிஎஸ்தான் முதல்வர்: நயினாா் நாகேந்திரன்

SCROLL FOR NEXT