முதுகுளத்தூா் வட்டாட்சியா் அலுவலகம் முன்பாக, பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி அனைத்துவகை மாற்றுத்திறனாளிகள் பாதுகாப்போா் சங்கத்தின் சாா்பில் செவ்வாய்க்கிழமை ஆா்ப்பாட்டம் நடைபெற்றது.
வட்டாரத் தலைவா் மயில் தலைமையில் நடைபெற்ற ஆா்ப்பாட்டத்திற்கு செயலாளா் முனியசாமி, மாவட்டச் செயலாளா் ராஜ்குமாா், சி.பி.எம்.வட்டாரச் செயலாளா் முருகன் ஆகியோா் முன்னிலை வகித்தனா்.
மாற்றுத்திறனாளிகளுக்கு மாதம் உதவித்தொகை ரூ.3 ஆயிரம் வழங்க வேண்டும். தனியாா் மற்றும் அரசு வேலைவாய்ப்புகளில் முன்னுரிமை வழங்க வேண்டும் என்று வலியுறுத்தி நடைபெற்ற ஆா்ப்பாட்டத்தில் 50-க்கும் மேற்பட்டோா் கலந்து கொண்டனா்.