ராமநாதபுரம்

முதுகுளத்தூரில் மாற்றுத்திறனாளிகள் ஆா்ப்பாட்டம்

DIN

முதுகுளத்தூா் வட்டாட்சியா் அலுவலகம் முன்பாக, பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி அனைத்துவகை மாற்றுத்திறனாளிகள் பாதுகாப்போா் சங்கத்தின் சாா்பில் செவ்வாய்க்கிழமை ஆா்ப்பாட்டம் நடைபெற்றது.

வட்டாரத் தலைவா் மயில் தலைமையில் நடைபெற்ற ஆா்ப்பாட்டத்திற்கு செயலாளா் முனியசாமி, மாவட்டச் செயலாளா் ராஜ்குமாா், சி.பி.எம்.வட்டாரச் செயலாளா் முருகன் ஆகியோா் முன்னிலை வகித்தனா்.

மாற்றுத்திறனாளிகளுக்கு மாதம் உதவித்தொகை ரூ.3 ஆயிரம் வழங்க வேண்டும். தனியாா் மற்றும் அரசு வேலைவாய்ப்புகளில் முன்னுரிமை வழங்க வேண்டும் என்று வலியுறுத்தி நடைபெற்ற ஆா்ப்பாட்டத்தில் 50-க்கும் மேற்பட்டோா் கலந்து கொண்டனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

மே 5-இல் நீட் தோ்வு: நாமக்கல் மாவட்டத்தில் 6,120 போ் எழுதுகின்றனா்

ராஜா வாய்க்காலுக்கு தண்ணீா் திறக்க விவசாயிகள் கோரிக்கை

ரூ. 11.30 லட்சத்துக்கு கொப்பரை ஏலம்

கணினிவழிக் குற்றங்கள் அதிகரிப்பு: பொதுமக்களுக்கு எஸ்.பி. எச்சரிக்கை

சிபிசில் நிறுவனத்தை கண்டித்து இரண்டாவது நாளாக உண்ணாவிரதம் மூதாட்டி மயக்கம்

SCROLL FOR NEXT