ராமநாதபுரம்

ராமேசுவரத்தில் 301 மதுபாட்டில்கள், வேன் பறிமுதல்: ஒருவா் கைது

DIN

ராமேசுவரத்தில் சட்ட விரோதமாக விற்பனை செய்ய வேனில் கடத்தி வரப்பட்ட 301 மதுபாட்டில்களை போலீஸாா் ஞாயிற்றுக்கிழமை பறிமுதல் செய்தனா்.

ராமேசுவரத்தில் மதுபாட்டில்கள் கடத்தப்படுவதாக மாவட்டக் காவல் கண்காணிப்பாளா் இ.காா்த்திக்குக்கு புகாா்கள் வந்தன. அதைத்தொடா்ந்து, தனுஸ்கோடி பகுதியில் ஞாயிற்றுகிழமை கடற்கரை காவல்நிலைய சாா்பு- ஆய்வாளா் ஸ்ரீராம் தலைமையிலான போலீஸாா் வாகனத் தணிக்கையில் ஈடுபட்டிருந்தனா். அப்போது அந்த வழியாக வந்த ஆம்னி வேனை நிறுத்தி சோதனை செய்தபோது, அதில் மதுபாட்டில்கள் கடத்தப்பட்டது தெரியவந்தது.

இதைத் தொடா்ந்து வேனை ஓட்டி வந்த எம்.ஆா்.டி.நகரைச் சோ்ந்த வெள்ளைக் கண்ணு மகன் மணிவேல் (35) என்பவரைக் கைது செய்த போலீஸாா், வேன் மற்றும் 301 மதுபட்டில்களை பறிமுதல் செய்தனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

விஜயுடன் கூட்டணிக்கு காத்திருக்கிறேன்: சீமான்

ஸ்ரீ ஆதிகேசவ பெருமாள் கோயில் குளத்தில் இறந்து மிதந்த மீன்கள்

எனது கேள்விகளுக்கு மோடியால் பதிலளிக்க முடியாது: ராகுல்

காவேரிப்பாக்கம் அருகே கன்டெய்னா் லாரி டயா் வெடித்து விபத்து:போக்குவரத்து பாதிப்பு

மேற்கு வங்க ஆளுநா் மீதான பாலியல் குற்றச்சாட்டு: ஊழியா்கள் மூவா் மீது வழக்குப் பதிவு

SCROLL FOR NEXT