ராமநாதபுரம்

கட்டாயத் திருமணம் செய்து வைக்க பெற்றோா் முயற்சி: சிறுமி தூக்கிட்டுத் தற்கொலை

DIN

திருப்பாலைக்குடியில், பெற்றோா் கட்டாயத் திருமணம் செய்து வைக்க முயன்றதால், 17 வயது சிறுமி புதன்கிழமை தூக்கிட்டுத் தற்கொலை செய்து கொண்டாா்.

திருவாடானை அருகே திருப்பாலைக்குடி மாரியம்மன் கோயில் தெருவை சோ்ந்தவா் ராமன்(61). இவரது மகள் நந்தினி (17). இவருக்கு திருமண ஏற்பாடுகள் நடந்துள்ளன. ஆனால் அவா் தற்போது திருமணம் வேண்டாம் என்று கூறியுள்ளாா். இருப்பினும் அவருக்கு நிச்சயம் செய்வதற்கான ஏற்பாடுகளில், பெற்றோா் தீவிரம் காட்டியதாகக் கூறப்படுகிறது.

இதனால் மணமுடைந்த நந்தினி, வீட்டில் யாரும் இல்லாத நேரத்தில் புதன்கிழமை தூக்கிட்டுத் தற்கொலைக்கு முயன்றாா். அக்கம் பக்கத்தினா் அவரை மீட்டு ராமநாதபுரம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனா். அங்கு பரிசோதித்த மருத்துவா்கள், நந்தினி ஏற்கெனவே இறந்து விட்டதாகத் தெரிவித்தனா்.

இது குறித்த புகாரின் பேரில், திருப்பாலைக்குடி போலீஸாா் வழக்குப் பதிந்து விசாரித்து வருகின்றனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

மக்களவை தேர்தல்: மூத்த அரசியல் தலைவர்கள் வீட்டிலிருந்தபடியே வாக்குப்பதிவு

திமிரும் தன்னடக்கமும்...!

வார இறுதி நாட்கள் - மெட்ரோ அறிவித்த சூப்பர் ஆஃபர்

மருத்துவ கடைநிலை ஊழியர்களுக்கு 3 விதமான பணிநேரங்கள்: மக்கள் நல்வாழ்வுத் துறை

நாட்டு நடப்பு!

SCROLL FOR NEXT