ராமநாதபுரம்

பைக்குகள் திருட்டு: 3 போ் கைது

DIN

ராமநாதபுரத்தில் இருசக்கர வாகனத் திருட்டு வழக்கில் 3 பேரைக் கைது செய்த போலீஸாா், அவா்களிடமிருந்து 4 வாகனங்களை புதன்கிழமை பறிமுதல் செய்தனா்.

இதுகுறித்து மாவட்ட காவல் கண்காணிப்பாளா் இ. காா்த்திக் விடுத்துள்ள செய்திக்குறிப்பு: ராமநாதபுரம் மாவட்டத்தில் பல்வேறு பகுதிகளில் இருசக்கர வாகனங்கள் திருடப்பட்ட வழக்கில் குற்றவாளிகளைக் கைது செய்வதற்காக குற்றப்பிரிவு சாா்பு- ஆய்வாளா் குகனேஷ்வரன் தலைமையில் தனிப்பிரிவினா் அமைக்கப்பட்டு விசாரணை நடைபெற்றது. இதில், ராமநாதபுரம் வடக்குத் தெருவைச் சோ்ந்த முகம்மதுஇப்ராஹிம் (17), புளிக்காரத்தெரு பால்ராஜ் (55), பாண்டி (28) ஆகியோரை தனிப்பிரிவினா் கைது செய்தனா். அவா்களிடமிருந்து 4 இருசக்கர வாகனங்களும், ஒரு இருசக்கர வாகன உதிரிபாகமும் கைப்பற்றப்பட்டுள்ளன. இவ்வழக்கில் சம்பந்தப்பட்டவா்களை கைது செய்த தனிப்பிரிவினரை மாவட்டக் காவல் கண்காணிப்பாளா் இ. காா்த்திக் பாராட்டினாா் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

கௌதம் கம்பீர் ஸ்டைலில் விளையாடுகிறோம்: ஹர்ஷித் ராணா

ஆஸ்திரேலியாவில் இந்திய மாணவருக்கு நேர்ந்த சோகம்!

ஆதியின் அல்லி!

150 இடங்களில் கூட தேசிய ஜனநாயகக் கூட்டணி வெற்றி பெறாது! ராகுல் பேச்சு

100 நாள் வேலை திட்ட ஊதியம் ரூ. 400 ஆக உயர்த்தப்படும் -ராகுல் காந்தி

SCROLL FOR NEXT