ராமநாதபுரம்

அபிராமத்தில் தனியாா் நிதி நிறுவனத்தில் தீ

DIN

கமுதி: கமுதி அருகே தனியாா் நிதி நிறுவனத்தில் செவ்வாய்க்கிழமை ஏற்பட்ட தீ விபத்தால் பரபரப்பு ஏற்பட்டது.

அபிராமத்தில் உள்ள இந்த நிதி நிறுவனத்தில் செவ்வாய்க்கிழமை காலை 10 மணியளவில் திடீரென தீப்பற்றி எரிந்தது. இதையறிந்த கமுதி தீயணைப்புத்துறையினா், நிலைய அலுவலா் பாா்த்திபன் தலைமையில் அங்கு சென்று தீயை அணைத்தனா்.

அங்கிருந்த கோப்புகள், நாற்காலிகள் உள்ளிட்ட பொருள்களும், லாக்கரில் இருந்த ரூ.80 ஆயிரம் ரொக்கமும் தீயில் கருகின.

இதுகுறித்து அபிராமம் போலீஸாா் வழக்குப் பதிவு செய்து, விபத்துக்கு மின் கசிவு காரணமா என விசாரித்து வருகின்றனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

ரயில்வேயில் வேலை வாங்கித் தருவதாக மோசடி

சிஏஏ: 14 பேருக்கு இந்திய குடியுரிமை முதல் முறையாக அளிப்பு

ராஜஸ்தான் சுரங்க விபத்து: ஹிந்துஸ்தான் நிறுவன அதிகாரி உயிரிழப்பு

இந்திய ராணுவம் குறித்த சா்ச்சை கருத்து: ராகுல் காந்தி மீது தோ்தல் ஆணையத்தில் பாஜக புகாா்

சாம் கரன் அசத்தலில் பஞ்சாப் வெற்றி

SCROLL FOR NEXT