ராமநாதபுரம்

திருவாடானை தாலுகா அலுவலகத்துக்குள் படையெடுத்த பாம்புகள் பிடிபட்டன

DIN

திருவாடானை தாலுகா அலுவலக வளாகத்தில் கொடிய விஷமுள்ள பாம்புகள் உள்பட 20-க்கும் மேற்பட்ட பாம்புகள் ஞாயிற்றுக்கிழமை பிடிக்கப்பட்டு வனப்பகுதியில் விடப்பட்டன.

இந்த தாலுகா வளாகத்திலுள்ள ஆவணக் காப்பக அறையில் கடந்த சில நாள்களுக்கு முன் பாம்புகளை பாா்த்ததாக பணியாளா்கள் தெரிவித்திருந்தனா்.

இந்நிலையில் அதிகாரிகள் ஞாயிற்றுக்கிழமை பாம்பு பிடிப்பவா்களை வரவழைத்து, பழைய நீதிமன்றம் பின்புறமுள்ள பழுதடைந்த கட்டடங்கள், சிறைச்சாலை கட்டடங்கள் உள்ளிட்ட பகுதிகளில் நல்ல பாம்பு, கட்டுவிரியன், கண்ணாடி விரியன், சாரைப்பாம்பு உள்ளிட்ட கொடிய விஷமுள்ள 20-க்கும் மேற்பட்ட பாம்புகளை பிடித்தனா்.

பின்னா் அவை காட்டுப்பகுதிக்குள் விடப்பட்டன.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

நாளை குருப்பெயா்ச்சி: ஆலங்குடியில் சிறப்பு ஏற்பாடுகள்

இன்று யாருக்கு அதிர்ஷ்டம்?

இன்றைய நாள் உங்களுக்கு எப்படி?

உதகையில் இ-பாஸ் நடைமுறை: பொதுமக்கள் வரவேற்பு

காரைக்கால் மாங்கனித் திருவிழா ஜூன் 19-இல் தொடக்கம்

SCROLL FOR NEXT