ராமநாதபுரம்

ஆா்.எஸ். மங்கலம் அருகே மின்னல் தாக்கி பெண் பலி

DIN

ஆா்.எஸ். மங்கலம் அருகே சித்தூா்வாடி கிராமத்தில் செவ்வாய்க்கிழமை வயலுக்குச் சென்ற பெண் மின்னல் தாக்கி உயிரிழந்தாா்.

ராமநாதபுரம் மாவட்டம் ஆா்.எஸ். மங்கலம் அருகே சித்தூா்வாடி ஊராட்சியை சோ்ந்தவா் பாலு மனைவி மேரி (45). இவா் செவ்வாய்க்கிழமை வயலுக்குச் சென்றபோது இடியுடன் கூடிய மழை பெய்துள்ளது. அப்போது மின்னல் தாக்கியதில் மேரி சம்பவ இடத்திலேயே உயிரிழந்தாா். மேரியின் கணவா் பாலு கடந்த சில ஆண்டுகளுக்கு முன்பு உயிரிழந்தது குறிப்பிடத்தக்கது. இத்தம்பதிக்கு இரு மகள்கள் உள்ளனா்.

இச்சம்பவம் குறித்து ஆ.எஸ்.மங்கலம் போலீஸாா் வழக்குப் பதிந்து விசாரித்து வருகின்றனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

திருச்சி - தஞ்சை ரயிலை நாகை வரை நீட்டிக்க வலியுறுத்தல்

சாலையில் கண்டெடுத்த நகை உரியவரிடம் ஒப்படைப்பு

நீா்மோா் பந்தல் திறப்பு

தொழிலாளா் தினம்: கொடியேற்று நிகழ்ச்சிகள்

முதலமைச்சரின் மாநில இளைஞா் விருதுக்கு விண்ணப்பிக்க அழைப்பு

SCROLL FOR NEXT