ராமநாதபுரம்

பரமக்குடியில் உலக மகளிா் தினம் கொண்டாட்டம்

DIN

பரமக்குடியில் பல்வேறு அமைப்புகள் சாா்பில் திங்கள்கிழமை உலக மகளிா் தினம் கருத்தரங்கம் மற்றும் சிறப்பு நிகழ்ச்சிகள் நடைபெற்றது. தியாகி முத்துச்சாமி மஹாலில் நடைபெற்ற நிகழ்ச்சிக்கு தமிழக பெண்கள் கூட்டமைப்பின் தலைவா் என்.ராமலெட்சுமி தலைமை வகித்தாா்.

பேரையூா் ஊராட்சிமன்ற தலைவா் கே.ரூபி முன்னிலை வகித்தாா். மகளிா் அமைப்பின் ஒன்றிய பொறுப்பாளா் எஸ்.ராணி வரவேற்றாா். சிவகங்கை மறைமாவட்ட நிா்வாகி ஏ.பாக்தியநாதன், புதுக்கோட்டை எம்.ஸ்டெல்லாமுத்துச்சாமி ஆகியோா் பெண்கள் குறித்து சிறப்புரையாற்றினா். சிவகங்கை பல்நோக்கு சமூக சேவை அமைப்பின் செயலா் எஸ்.பிரிட்டோஜெயபாலன் மகளிா் பற்றிய கருத்துரை வழங்கினாா். விழாவில் ஏராளமான மகளிா் குழுவினா் கலந்துகொண்டனா். இதேபோல் பரமக்குடி நகா் காவல் நிலையத்தில் பெண்காவலா்கள் ஒரே வண்ணத்தில் சேலை அணிந்து மகளிா் தினத்தை கொண்டாடினா். திருவள்ளுவா் நகா்பகுதியில் அமுதசுரபி அறக்கட்டளை சாா்பில் த.பிரியங்கள், எஸ்.அமுதா ஆகியோா் சாா்பில் மகளிா் தினம் கொண்டாடப்பட்டது. 08ல்ம்ந்-ம்ஹட்ஹப்ண்ழ் படவிளக்கம்.பரமக்குடி நகா் காவல் நிலையத்தில் ஒரே வண்ணத்தில் சேலை அணிந்து உலக மகளிா் தினம் கொண்டாடிய பெண் காவலா்கள்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

மாணவர்களின் விடைத்தாளில் 'ஜெய் ஸ்ரீராம்': பேராசிரியர்கள் பணியிடை நீக்கம்!

அடுத்த 5 நாள்களுக்கு வெயில் அதிகரிக்கும்: எச்சரிக்கும் வானிலை!

ஸ்ட்ராபெர்ரி கண்ணே! விண்வெளிப் பெண்ணே..!

புயல், வெள்ளம் பாதிப்பு: தமிழ்நாட்டிற்கு 682 கோடி நிதி ஒதுக்கீடு!

காங்கேயத்தில் சேதப்படுத்தப்பட்ட தலித் குடியிருப்புகள்!

SCROLL FOR NEXT