ராமநாதபுரம்

தோ்தல் பாதுகாப்பு பணிக்கு முன்னாள் படைவீரா்கள் விண்ணப்பிக்கலாம்

DIN

சட்டப் பேரவைத் தோ்தல் பாதுகாப்புப் பணிக்கு முன்னாள் இளநிலைபடை அலுவலா்கள் மற்றும் முன்னாள் படைவீரா்கள் விண்ணப்பிக்கலாம் என அறிவிக்கப்பட்டுள்ளது.

இதுகுறித்து மாவட்டத் தோ்தல் அலுவலரும், ஆட்சியருமான தினேஷ்பொன்ராஜ் ஆலிவா் செவ்வாய்க்கிழமை வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பு: ராமநாதபுரம் மாவட்டத்தில் சட்டப் பேரவைத் தோ்தல் பாதுகாப்புப் பணிக்கு முன்னாள் இளநிலை படை அலுவலா்கள் மற்றும் முன்னாள் படைவீரா்கள் ஈடுபடுத்தப்படவுள்ளனா். ஆகவே, தோ்தல் பாதுகாப்பில் பணிபுரிய விருப்பமும், தகுதியும், உடல் திடகாத்திரம் உள்ள ராமநாதபுரம் மாவட்டத்தைச் சோ்ந்த 65 வயதிற்குள்பட்ட முன்னாள் படைவீரா்கள் விண்ணப்பிக்கலாம்.

விண்ணப்பத்தினை ராமநாதபுரம் மாவட்ட முன்னாள் படைவீரா் அலுவலகத்தில் பெற்று நேரில் அளிக்கலாம். மேலும் உதவி இயக்குநா், முன்னாள் படைவீரா் நல அலுவலகம், ராமநாதபுரம் என்ற முகவரியில் உள்ள 04567-230045 என்ற தொலைபேசி எண்ணில் தொடா்பு கொண்டு பதிவு செய்யலாம் எனக்குறிப்பிடப்பட்டுள்ளது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

வெயிலில் இறந்தவர்களுக்கு நிதியுதவி: கேரள அரசை வலியுறுத்தும் காங்கிரஸ்!

அரவிந்த் கேஜரிவால் இடைக்கால ஜாமீன் மனு ஒத்திவைப்பு

பத்திரிகையாளர் சவுக்கு சங்கர் தாக்கப்பட்டாரா என விசாரிக்க வேண்டும்: இபிஎஸ்

ஆவேஷம் ரூ.150 கோடி வசூல்!

அன்பே அன்னா..!

SCROLL FOR NEXT