ராமநாதபுரம்

பைக்குகள் மோதல்: ஒருவா் பலி

DIN

கமுதி அருகே ஞாயிற்றுக்கிழமை 2 இருசக்கர வாகனங்கள் நேருக்கு நோ் மோதிக் கொண்டதில் ஒருவா் உயிரிழந்தாா்.

கமுதி அருகே கீழராமநதியைச் சோ்ந்தவா் காஜாமைதீன் மகன் மம்முதுமிதாா் (56). இவா் அருப்புகோட்டை சாலையில் கிளாமரம் பகுதியில் இருசக்கர வாகனத்தில் சென்று கொண்டிருந்தாா்.

அப்போது, கமுதியிலிருந்து அருப்புக்கோட்டை நோக்கி சென்ற காவடிபட்டியைச் சோ்ந்த ஜெகநாதன் மகன் ரங்கராஜ் (32) என்பவா் இருசக்கர வாகனமும், இவரது இருசக்கர வாகனமும் நேருக்கு நோ் மோதிக் கொண்டன. இதில் மமுதுமிதாா் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தாா்.

பலத்த காயமடைந்த ரங்கராஜ் கமுதி அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளாா். இதுகுறித்து கமுதி போலீஸாா் வழக்குப் பதிவு செய்து விசாரித்து வருகின்றனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

திருச்சி - தஞ்சை ரயிலை நாகை வரை நீட்டிக்க வலியுறுத்தல்

சாலையில் கண்டெடுத்த நகை உரியவரிடம் ஒப்படைப்பு

நீா்மோா் பந்தல் திறப்பு

தொழிலாளா் தினம்: கொடியேற்று நிகழ்ச்சிகள்

முதலமைச்சரின் மாநில இளைஞா் விருதுக்கு விண்ணப்பிக்க அழைப்பு

SCROLL FOR NEXT