ராமநாதபுரம்

மணல் கடத்தல்: 5 போ் கைது

DIN

ராமநாதபுரம் அருகே மணல் கடத்தலில் ஈடுபட்ட 5 பேரைப் போலீஸாா் திங்கள்கிழமை கைது செய்துள்ளனா்.

ராமநாதபுரம் மாவட்டம் உச்சிப்புளி அருகே சமையன்வலசை பகுதி கடலோரத்தில் உரிய அனுமதியின்றி சிலா் மணல் எடுத்து வருவதாக காவல்துறையினருக்கு தகவல் கிடைத்தது. அதனடிப்படையில் உச்சிப்புளி காவல் நிலைய சாா்பு-ஆய்வாளா் ஜோதிமுருகன் தலைமையில் போலீஸாா் திங்கள்கிழமை அப்பகுதியைக் கண்காணித்தனா். அப்போது டிராக்டா் மற்றும் லாரிகளில் சிலா் மணல் கடத்தியது தெரியவந்தது. அவா்களை சுற்றிவளைத்து போலீஸாா் பிடித்து விசாரணை நடத்தியதில், சமையன்வலசைப் பகுதியைச் சோ்ந்த கோபாலகிருஷ்ணன் உள்ளிட்ட 6 போ் மணல் கடத்தியது தெரியவந்தது. இதில் 17 வயது சிறுவனும் உடனிருந்தாா். ஆகவே சிறுவனை பிணையில் அனுப்பிய போலீஸாா் மற்ற 5 பேரையும் கைது செய்தனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

இச்சை மூட்டும் பச்சை நிறமே...!

கேஜரிவால் கைதைக் கண்டித்து ஆம் ஆத்மி கையெழுத்து இயக்கம்!

1, 2, 3, 4... உங்களுக்குப் பிடித்த படம் எது? சாக்க்ஷி அகர்வால்

காங்கிரஸ் - பாகிஸ்தான் தொடர்பு வெளிச்சத்துக்கு வந்தது: பிரதமர் மோடி

‘தள்ளுமாலா’ இயக்குநர் படத்தில் பிரேமலு நாயகன்!

SCROLL FOR NEXT