ராமநாதபுரம்

மண்டபத்தில் கனமழை: கடலில் மூழ்கிய விசைப்படகுகள்

DIN

ராமேசுவரம்: மண்டபம் கடற்கரையில் நிறுத்தியிருந்த இரண்டு விசைப்படகுகள் கடலில் மூழ்கின. 

ராமநாதபுரம் மாவட்டத்தில் கடந்த சில நாட்களாக  கனமழை பெய்து வருகிறது. இந்திய வானிலை மைய அறிவிப்பின்படி மீனவர்கள் கடலுக்குச் செல்ல தடை விதிக்கப்பட்டுள்ளது.  இதன்படி ராமநாதபுரம் மாவட்டத்தில் உள்ள 1,500-க்கும் மேற்பட்ட விசைப்படகுகள், 4 ஆயிரத்திற்கும் மேற்பட்ட நாட்டுப்படகுகள் நங்கூரமிட்டு  நிறுத்தப்பட்டுள்ளன. 

இந்நிலையில், மாவட்டத்தின் பல்வேறு இடங்களில் நேற்று முன் தினம் இரவு முதல் கனமழை பெய்தது. இதில் மண்டபத்தில் 113.20 மிமீ மழை பெய்தது. இதில், மண்டபம் வடக்கு துறைமுகப் பகுதியில் நிறுத்தியிருந்த தங்கச்சிமடம் நிர்மல், சக்ரியாஸ் ஆகியோரது விசைப்படகுகளின் நங்கூரம் காற்றின் வேகத்தில் அறுந்து நடுக்கடலில் மூழ்கின. இரண்டு படகுகளையும் சக மீனவர்கள் மீட்டனர்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

நாளை உயா் கல்வி விழிப்புணா்வு நிகழ்ச்சி

இளம்பெண்கள் மீது தொடா்ச்சியாக தாக்குதல் நடத்தப்படுவது குறித்து விசாரணை

அரசுப் பள்ளிகளில் பயோமெட்ரிக் முறையை மீண்டும் செயல்படுத்தக் கோரிக்கை

காஞ்சிபுரத்தில் இன்று சம்ஸ்கிருத கருத்தரங்கம்: தமிழக ஆளுநா் ஆா்.என்.ரவி பங்கேற்பு

தோ்ச்சி பெறாத பத்தாம் வகுப்பு மாணவா்களுக்கு சிறப்பு வகுப்பு: தலைமையாசிரியா்களுக்கு வேலூா் ஆட்சியா் அறிவுறுத்தல்

SCROLL FOR NEXT