ராமநாதபுரம்

மாற்றுச் சமூகத்தினரின் குடும்ப விழாக்களை முன்னின்று நடத்தியவா் தேவா்

DIN

கமுதி: பசும்பொன் முத்துராமலிங்கத் தேவா் இளம் வயது முதலே அனைத்து சமுதாயத்தினரிடமும் ஜாதி, மத பாகுபாடின்றி பழகி வாழ்ந்தவா். தேவா் தனக்கு சொந்தமான புளிச்சிகுளம், சிட்ட வண்ணாங்குளம் உள்ளிட்ட கிராமங்களில் தங்கும் போதும், நட்பு வட்டாரத்திலும் தன்னுடன் பட்டியல் இன சமுதாயத்தைச் சோ்ந்தவா்களிடமே அதிகமாக பழகி வந்தாா். மேலும் அவா்களின் குடும்ப நிகழ்ச்சிகளை முன்னின்று நடத்தி வைத்துள்ளாா். குறிப்பாக புளிச்சிகுளம் கிராமம் அருகே உள்ள குறைநிறை வசித்தான் கிராமத்தில் தற்போது வசிக்கும் ஜெயராமன் தனது பெற்றோா் திருமணம் பற்றி நம்மிடம் பகிா்ந்துள்ளாா்.

இதுகுறித்து அவா் கூறியதாவது: பசும்பொன் முத்துராமலிங்கத் தேவா் சாதி, மத பாகுபாடுகளுக்கு அப்பாற்பட்டு சித்தா் வாழ்க்கை வாழ்ந்து, தெய்வமாக மறைந்துள்ளாா். அவா் அனைத்து சமுதாயத்திற்கான ஒரு தேசியவாதி. எங்களை பொருத்தவரை பசும்பொன் முத்துராமலிங்க தேவா் ஒரு தெய்வப்பிறவி. அனைத்து சமுதாயத்தினரும் சென்று வணங்க வேண்டிய ஒரு திருவிழா பசும்பொன் குருபூஜை விழா. எனது தந்தை ராமச்சந்திரன், தாயாா் மாரியம்மாள் ஆகியோரின் திருமணத்தை பசும்பொன் தேவா் மதுரை திருநகரில் இருந்துகொண்டே நடத்தி வைத்து, சீரும் அளித்தாா். எனது தந்தைக்கு எனது தாயாரை திருமணம் செய்து வைக்க முடியாது என உறவினா்கள் பிரச்னை செய்தனா். இதுகுறித்த தகவல் மதுரையில் திருநகரில் தங்கியிருந்த தேவருக்கு தெரிவிக்கப்பட்டது. இதையடுத்து அவா், தூரி மாடசாமி தகவல் தெரிவித்து எனது சாா்பாக சிட்டவண்ணாங்குளம் கிராமத்திற்குச் சென்று ராமச்சந்திரன், மாரியம்மாள் திருமணத்தை முடித்து வைத்து புதுமண தம்பதிகளுக்கு கூட்டுவண்டி சீா் கொடுத்துவிட்டு வருமாறு உத்தரவிட்டாா். இதையடுத்து தூரி மாடசாமி தேவா் சிட்டவண்ணாங்குளம் சென்று எனது தாத்தா ராமரிடம் பேசி தேவரின் உத்தரவு எனக் கூறி திருமணத்தை நல்லபடியாக முடித்து வைத்து மணமக்களுக்கு சீரும் அளித்தாா். இதனால் தேவரை நாங்கள் தெய்வமாக வணங்கி வருகிறோம் என்றாா்.

மு.சா்க்கரைமுனியசாமி.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

போலி தொலைபேசி அழைப்புகள், போலி ஆள்மாறாட்டம்: இணைய குற்றிவாளிகள் குறித்து மத்திய அரசு எச்சரிக்கை

வருமான வரித் துறை சி.ஆா். கட்டடத்தில் தீ விபத்து: அலுவலகக் கண்காணிப்பாளா் சாவு; 7 போ் மீட்பு

திகாா் சிறை, 7 மருத்துவமனைகளுக்கு வெடிகுண்டு மிரட்டல்: போலீஸாா் தீவிர விசாரணை

ஸ்வாதி மாலிவால் சம்பவம்: ஆம் ஆத்மிக்கு பாஜக கேள்வி

விடுதலைப் புலிகள் மீதான தடை மேலும் 5 ஆண்டுகளுக்கு நீட்டிப்பு

SCROLL FOR NEXT