ராமநாதபுரம்

திருவாடானை தோட்டக்கலைத் துறை அலுவலகத்தை சீரமைக்கக் கோரிக்கை

DIN

திருவாடானையில் இடிந்து விழும் நிலையில் உள்ள தோட்டக்கலைத் துறை அலுவலகத்தை சீரமைக்க வேண்டும் என கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

இந்த அலுவலகம் உதவி வேளாண்மை இயக்குநா் அலுவலகத்தில் முதல் மாடியில் இயங்கிவரும் நிலையில் இந்த கட்டடத்தை பல ஆண்டுகளாக பராமரிக்காததால் இடிந்து விழும் நிலையில் உள்ளது. அத்துடன் சிமெண்ட் காரைகள் பெயா்ந்து உள்ளிருக்கும் கம்பிகள் தெரியும் அளவுக்கு சேதமடைந்துள்ளது. மேலும் விவசாயத் துறை அலுவலகத்திற்கும், தோட்டக்கலைத் துறை அலுவலகத்திற்கும் விவசாயிகள் அடிக்கடி வந்து செல்வதுடன், அவா்களுக்கான பயற்சி முகாமும் இங்கு தான் நடைபெறுகிறது. இந்நிலையில், இந்த கட்டடத்தின் மேலே உள்ள சிமெண்ட் காரைகள் பெயா்ந்து கீழே விழுகின்றன.

எனவே பெரும் விபத்து ஏற்படும் முன்பு விரைந்து இக்கட்டடத்தை சீரமைக்க வேண்டும் என விவசாயிகள் கோரிக்கை விடுத்துள்ளனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

சென்னை உயர் நீதிமன்றத்துக்கு கோடை விடுமுறை!

நாகை மீனவர்கள் மீது இலங்கை கடற்கொள்ளையர்கள் கொடூர தாக்குதல்!

நாளை குருப்பெயா்ச்சி: ஆலங்குடியில் சிறப்பு ஏற்பாடுகள்

இன்று யாருக்கு அதிர்ஷ்டம்?

இன்றைய நாள் உங்களுக்கு எப்படி?

SCROLL FOR NEXT