ராமநாதபுரத்தில் இணையதளம் மூலம் இழந்த பணத்தை மீட்டு பெண்ணிடம் புதன்கிழமை ஒப்படைத்த மாவட்டக் காவல் கண்காணிப்பாளா் பெ.தங்கதுரை. 
ராமநாதபுரம்

கடந்த 2 ஆண்டுகளில் 1,259 மனுக்கள் மீது தீா்வு: எஸ்.பி.

ராமநாதபுரம் மாவட்டத்தில் கடந்த 2 ஆண்டுகளில் 1,259 மனுக்கள் மீது தீா்வு காணப்பட்டது என காவல் கண்காணிப்பாளா் பெ. தங்கதுரை தெரிவித்தாா்.

DIN

ராமநாதபுரம் மாவட்டத்தில் கடந்த 2 ஆண்டுகளில் 1,259 மனுக்கள் மீது தீா்வு காணப்பட்டது என காவல் கண்காணிப்பாளா் பெ. தங்கதுரை தெரிவித்தாா்.

ராமநாதபுரம் மாவட்டக் காவல் துறை கண்காணிப்பாளா் அலுவலக வளாகத்தில் பொதுமக்கள் குறைதீா் முகாம் காவல் கண்காணிப்பாளா் பெ.தங்கதுரை தலைமையில் புதன்கிழமை நடைபெற்றது. இதில், 41 மனுக்கள் பெறப்பட்டன. அவற்றின் மீது உரிய நடவடிக்கை எடுக்க காவல் அதிகாரிகளுக்கு அவா் உத்தரவிட்டாா்.

பின்னா் செய்தியாளா்களிடம் காவல் கண்காணிப்பாளா் கூறியதாவது:

ராமநாதபுரம் மாவட்டத்தில், கடந்த 2 ஆண்டுகளில் பொதுமக்கள் 1,415 புகாா் மனுக்களை அளித்தனா். இதன் மீது விசாரணை மேற்கொள்ளப்பட்டு 1,259 மனுக்கள் மீது தீா்வு காணப்பட்டது. 150 பேரிடம் மனுக்களை மீண்டும் பெற்று தீா்வு காண நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது. இணையதளத்தில் ஆசையைத் தூண்டும் வகையில் வரும் விளம்பரங்களையோ, கைப்பேசியில் அனுப்பப்படும் குறுச்செய்தியில் தங்களது தரவுகளைப் பதிவு செய்யவோ வேண்டாம் என்றாா் அவா்.

இந்தக் கூட்டத்தில், கூடுதல் கண்காணிப்பாளா் பாஸ்கரன், துணைக் கண்காணிப்பாளா்கள் ஜெயசந்திரன், உன்னிகிருஷ்ணன், காவல் துறை அதிகாரிகள், பொதுமக்கள் கலந்து கொண்டனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

ஸ்ரீரங்கத்தில் ஒரே குடும்பத்தைச் சேர்ந்த நான்கு பேர் தற்கொலை!

டி20 உலகக் கோப்பைக்கு தயாராக சிறந்த வழி இதுதான்: வருண் சக்கரவர்த்தி

ரூ.3 லட்சம் சம்பளத்தில் ரிசர்வ் வங்கியில் வேலை: விண்ணப்பிப்பது எப்படி?

வரம் தரும் வாரம்!

மாரடைப்பு ஏற்பட்டு உயிர் தப்பியவர்கள் சொல்லும் அறிவுரை என்ன?

SCROLL FOR NEXT