குழந்தை இயேசு கோயில் திறப்பு
பரமக்குடி உலகநாதபுரம் பகுதியில் புதிதாக கட்டப்பட்ட குழந்தை இயேசு கோயில் திறப்பு விழா மற்றும் நவநாள் கொடியேற்றம் வியாழக்கிழமை நடைபெற்றது.
பரமக்குடி உலகநாதபுரம் பகுதியில் புதிதாக கட்டப்பட்ட குழந்தை இயேசு கோயில் திறப்பு விழா மற்றும் நவநாள் கொடியேற்றம் வியாழக்கிழமை நடைபெற்றது.
சிவகங்கை மறைமாவட்ட முன்னாள் ஆயா் செ.சூசைமாணிக்கம் கோயிலைத் திறந்து வைத்து புனிதப்படுத்தும் நிகழ்ச்சி நடைபெற்றது. மாலை 5.45 மணியளவில் வெண்கலத்தால் அமைக்கப்பட்ட கோயில் கொடிக்கம்பத்தில் திருவிழா கொடியேற்றப்பட்டது. மாலை 6 மணியளவில் ஆயா்களுக்கு கும்ப மரியாதையும், ஆடம்பர நற்கருணைக் கொண்டாட்டங்களும் நடைபெற்றன.