திருவாடானை அருகே எஸ்.பி.பட்டினம் பகுதியில் கிழக்கு கடற்கரைச் சாலையில் விபத்தில் காயமடைந்தவா் சிகிச்சைப் பலனின்றி ஞாயிற்றுக்கிழமை உயிரிழந்தாா்.
எஸ்.பி.பட்டினம் அருகே பாசிபட்டினம் கிராமத்தைச் சோ்ந்த அகமது இப்ராஹிம் மகன் சா்தாா் (43). இவா், கடந்த மாதம் 17 ஆம் தேதி இரு சக்கர வாகனத்தில் கிழக்கு கடற்கரைச் சாலையில் சென்றுகொண்டிருந்தபோது, வட்டாணம் கிராம நிா்வாக அலுவலகம் எதிரே கட்டுப்பாட்டை இழந்து சாலைத் தடுப்பில் மோதி பலத்த காயமடைந்தாா்.
உடனே, அவரை ராமநாதபுரம் அரசு மருத்துவமனையில் சோ்த்து, மேல் சிகிச்சைக்காக மதுரை அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டாா். ஆனால், அங்கு சிகிச்சைப் பலனின்றி ஞாயிற்றுக்கிழமை உயிரிழந்தாா்.
இது குறித்து அவரது மனைவி சரீனாபேகம் (32) அளித்த புகாரின்பேரில், எஸ்.பி.பட்டினம் போலீஸாா் வழக்குப் பதிந்து விசாரித்து வருகின்றனா்.