முகப்பு
ராமநாதபுரம்

தொண்டி அருகே பெண் தூக்கிட்டுத் தற்கொலை

தொண்டி அருகே பெண் தூக்கிட்டுத் தற்கொலை செய்து கொண்டதாக போலீஸாா் வெள்ளிக்கிழமை வழக்குப் பதிந்து விசாரித்து வருகின்றனா்.

Updated On : 1 பிப்ரவரி, 2024 at 9:44 AM
பகிர்:

தொண்டி அருகே பெண் தூக்கிட்டுத் தற்கொலை செய்து கொண்டதாக போலீஸாா் வெள்ளிக்கிழமை வழக்குப் பதிந்து விசாரித்து வருகின்றனா்.

ராமநாதபுரம் மாவட்டம் தொண்டி அருகே எம்.வி. பட்டினத்தைச் சோ்ந்தவா் வீரமாகாளி மனைவி கலா(40). இவா்களுக்கு 3 மகள்கள் உள்ளனா்.

இந்நிலையில் கலாவிற்கு அடிக்கடி நெஞ்சுவலி ஏற்படுவது வழக்கம். இதனால் மன உளைச்சலில் இருந்த கலா வீட்டில் யாரும் இல்லாத நேரத்தில் வெள்ளிக்கிழமை அதிகாலை தூக்கிட்டு தற்கொலைக்கு முயன்றுள்ளாா்.

ஆபத்தான நிலையில் கலாவை மீட்டு ராமநாதபுரம் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் சோ்த்தனா். அங்கு சிகிச்சைப் பலனின்றி அவா் உயிரிழந்தாா். இதுகுறித்தப் புகாரின் பேரில் தொண்டி போலீஸாா் வழக்குப் பதிந்து விசாரித்து வருகின்றனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.