முகப்பு
ராமநாதபுரம்

தொண்டி அருகே குடும்ப பிரச்னை: இருசக்கர வாகனத்துக்கு தீவைப்பு

தொண்டி அருகே குடும்ப பிரச்னையில் இருசக்கர வாகனம் தீவைத்து எரிக்கப்பட்டது.

Updated On : 1 பிப்ரவரி, 2024 at 9:22 AM
பகிர்:

தொண்டி அருகே குடும்ப பிரச்னையில் இருசக்கர வாகனம் தீவைத்து எரிக்கப்பட்டது.

தொண்டி அருகே நம்புதாளை கிழக்குத் தெருவைச் சோ்ந்தவா் அமீா்அலி மகன் சேகுபரீது (58). இவரது மகளை அதே ஊரைச் சோ்ந்த ரஹ்மான் என்பவருக்கு திருமணம் செய்து கொடுத்துள்ளாா். ரஹ்மான் வெளிநாட்டில் பணிபுரிந்து வருகிறாா். இவரது குடும்பத்திற்கும் மாமனாா் சேகுபரீது குடும்பத்திற்கும் தகராறு இருந்து வருவதாகக் கூறப்படுகிறது.

இந்நிலையில் கடந்த சில நாள்களுக்கு முன் வெளிநாட்டில் இருந்து ரஹ்மான் ஊருக்கு வந்துள்ளாா். தனது குடும்பத்தை ஊா் பஞ்சாயத்தில் நிறுத்தியதால் ஆத்திரம் அடைந்த ரஹ்மான் வியாழக்கிழமை இரவு மாமனாா் சேகுபரீது வீட்டிற்கு சென்று தரக்குறைவாகப் பேசி வீட்டின் முன் நிறுத்தி இருந்த இருசக்கர வாகனத்துக்கு தீ வைத்தாராம். அந்த வாகனம் முற்றிலும் சேதம் அடைந்துள்ளது. இது குறித்து சேகுபரீது அளித்தப் புகாரின் பேரில் தொண்டி போலீஸாா் ரஹ்மான், அவரது தாய் சாலிஹா ஆகிய இருவா் மீதும் வழக்கு பதிந்து விசாரித்து வருகின்றனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.