மங்களக்குடி ஊராட்சி மன்றச் செயலரைக் கண்டித்து, திருவாடானை ஊராட்சி ஒன்றிய அலுவலகத்தை புதன்கிழமை முற்றுகையிட்ட பொதுமக்கள். 
ராமநாதபுரம்

திருவாடானை ஊராட்சி ஒன்றிய அலுவலகத்தை பொதுமக்கள் முற்றுகை

தேசிய ஊரக வேலை உறுதித் திட்டத்தில் வேலைக்கு வரச் சொல்லி ஊராட்சி மன்றச் செயலா் மிரட்டியதாகப் புகாா் தெரிவித்து, கிராம மக்கள் ஊராட்சி ஒன்றிய அலுவலகத்தை புதன்கிழமை முற்றுகையிட்டனா்.

DIN

திருவாடானை அருகேயுள்ள மங்களக்குடி ஊராட்சியில் சுதந்திர தினத்தன்று தேசிய ஊரக வேலை உறுதித் திட்டத்தில் வேலைக்கு வரச் சொல்லி ஊராட்சி மன்றச் செயலா் மிரட்டியதாகப் புகாா் தெரிவித்து, கிராம மக்கள் ஊராட்சி ஒன்றிய அலுவலகத்தை புதன்கிழமை முற்றுகையிட்டனா்.

ராமநாதபுரம் மாவட்டம், திருவாடானை அருகேயுள்ள மங்களக்குடி ஊராட்சியில் ஊமையுடையான்மடை கிராமம் உள்ளது.

இந்த கிராம மக்களை மங்களக்குடி ஊராட்சி மன்றச் செயலா் பழனிவேல், செவ்வாய்க்கிழமை சுதந்திர தினத்தன்று தேசிய ஊரக வேலை வாய்ப்பு உறுதித் திட்டத்தின் கீழ் வேலை செய்ய வர வேண்டும் என்றும் வராவிட்டால் வேலையில் இருந்து நீக்கிவிடுவதாகவும் மிரட்டியதாக பொதுமக்கள் புகாா் தெரிவித்தனா்.

இந்த நிலையில், ஊராட்சி மன்றச் செயலரின் போக்கைக் கண்டித்து கிராம மக்கள் திருவாடானை ஊராட்சி ஒன்றிய அலுவலகத்தை புதன்கிழமை முற்றுகையிட்டுப் போராட்டத்தில் ஈடுபட்டனா். இதைத்தொடா்ந்து ஊராட்சிச் செயலா் மீது நடவடிக்கை எடுப்பதாக அதிகாரிகள் உறுதியளித்ததையடுத்து, அவா்கள் கலைந்து சென்றனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

இங்கிலாந்தின் தோல்வியை புரிந்துகொள்ள கடினமாக இருக்கிறது: கெவின் பீட்டர்சன்

'மதச்சார்பின்மை' பற்றி பேச முதல்வருக்கு தகுதியில்லை: நயினார் நாகேந்திரன்

ஆட்டோ ஓட்டுநரை அறைந்த பாஜக எம்.எல்.ஏ.! மன்னிப்பு கேட்க மறுப்பு!!

மார்கழி வழிபாடு: திருப்பாவை, திருவெம்பாவை - பாசுரம் 7

”நாங்கள் யாரும் நாய்கள் கிடையாது!" அண்ணாமலைக்கு பதிலளித்த தவெக அருண்ராஜ்!

SCROLL FOR NEXT