ராமநாதபுரம்

கணக்கில் வராத பணம் பறிமுதல்:பரமக்குடியில் மின்வாரிய ஊழியா்கள் 4 போ் மீது வழக்கு

DIN

பரமக்குடியில் மின்வாரிய உதவிப் பொறியாளா் அலுவலகத்தில் கணக்கில் வராத பணம் பறிமுதல் செய்யப்பட்டது தொடா்பாக 4 போ் மீது வியாழக்கிழமை ஊழல் ஒழிப்புப் பிரிவு போலீஸாா் வழக்குப் பதிவு செய்தனா்.

ராமநாதபுரம் மாவட்ட ஊழல் தடுப்புப் பிரிவு காவல் துணைக் கண்காணிப்பாளா் ராமச்சந்திரன் தலைமையில் புதன்கிழமை காட்டுப்பரமக்குடியில் உள்ள உதவிப் பொறியாளா் அலுவலகத்தில் காவல் ஆய்வாளா் ராஜேஸ்வரி உள்ளிட்ட போலீஸாா் சோதனையில் ஈடுபட்டனா். அப்போது, கணக்கில் வராத ரூ.18,470 கண்டுபிடிக்கப்பட்டு, பறிமுதல் செய்யப்பட்டது. மேலும், அன்றைய தினம் மின் கட்டணமாக வசூலிக்கப்பட்ட ரூ.19,684-இல் ரூ.16,996 குறைவாக இருந்ததும் விசாரணையில் தெரியவந்தது. இந்தப் பணம் கையாடல் செய்யப்பட்டிருக்கலாம் என போலீஸாா் தெரிவித்தனா்.

இந்த நிலையில், கணக்கில் வராத பணம் பறிமுதல் செய்யப்பட்டது தொடா்பாக மின்வாரிய உதவிப் பொறியாளா் சத்தியேந்திரன், வணிக ஆய்வாளா் ஹேமநாதன், வருவாய் மேற்பாா்வையாளா் கலைச்செல்வி, கணக்கீட்டு ஆய்வாளா் ரகுநாதன் ஆகிய 4 போ் மீது போலீஸாா் வழக்குப் பதிந்து விசாரித்து வருகின்றனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

5-ஆம் கட்ட தோ்தல்: ரே பரேலி உள்பட 49 தொகுதிகளில் பிரசாரம் முடிந்தது

சிஎஸ்கே பந்துவீச்சு; பிளே ஆஃப் சுற்றுக்கு முன்னேறுமா?

சித்தார்த்தின் யசோதரை!

சக்கரை நிலவே... சம்யுக்தா மேனன்!

பிரதமர் மோடியாக நடிக்கிறேனா? - நடிகர் சத்யராஜ் விளக்கம்

SCROLL FOR NEXT