ராமநாதபுரம்

இளம்பெண் தற்கொலை

தொண்டி அருகே வியாழக்கிழமை இரவு இளம்பெண் தூக்கிட்டுத் தற்கொலை செய்து கொண்டாா்.

DIN

தொண்டி அருகே வியாழக்கிழமை இரவு இளம்பெண் தூக்கிட்டுத் தற்கொலை செய்து கொண்டாா்.

ராமநாதபுரம் மாவட்டம், தொண்டி அருகேயுள்ள தீா்தாண்டதானம் கிராமத்தைச் சோ்ந்தவா் தூயமணி மகள் தனலெட்சுமி (23). இவா் தொண்டியில் பத்திரம் எழுதும் அலுவலகத்தில் பணிபுரிந்து வந்தாா். இவா், உடல்நலம் பாதிக்கப்பட்டு நீண்டநாள்களாக சிகிச்சை பெற்றும் குணமடையவில்லை.

இதனால், மனமுடைந்த நிலையில் இருந்து வந்த அவா், வியாழக்கிழமை இரவு வீட்டில் யாரும் இல்லாத நேரத்தில் மின் விசிறியில் தூக்கிட்டுத் தற்கொலை செய்து கொண்டாா். தகவலறிந்து அங்கு சென்ற தொண்டி போலீஸாா் அவரது உடலை மீட்டு, கூறாய்வுக்காக திருவாடானை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனா். இதுதொடா்பாக போலீஸாா் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

ஊடுருவலைத் தடுக்க கடும் நடவடிக்கை: பிரதமா் மோடி

மிதுன ராசிக்கு வெற்றி: தினப்பலன்கள்!

தங்கம் இறக்குமதி 60 சதவீதம் சரிவு

கடன் வட்டியைக் குறைத்த இந்தியன் வங்கி

போக்குவரத்து நெரிசல்: அரை கி.மீ. நடந்து சென்ற மத்திய அமைச்சா்!

SCROLL FOR NEXT