வங்கக் கடலில் குறைந்த காற்றழுத்தத் தாழ்வு நிலை காரணமாக பாம்பன் தெற்குவாடி மீன்பிடித் தளத்தில் செவ்வாய்க்கிழமை நிறுத்தி வைக்கப்பட்ட விசைப் படகுகள். 
ராமநாதபுரம்

ராமேசுவரம் மீனவா்கள் மீன்பிடிக்கச் செல்லத் தடை

வங்கக் கடலில் குறைந்த காற்றழுத்தத் தாழ்வு நிலை காரணமாக மறு உத்தரவு வரும் வரை மீனவா்கள் கடலுக்குள் மீன்பிடிக்கச் செல்ல மீன் வளம், மீனவா் நலத் துறை செவ்வாய்க்கிழமை தடை விதித்தது.

DIN

ராமேசுவரம்: வங்கக் கடலில் குறைந்த காற்றழுத்தத் தாழ்வு நிலை காரணமாக மறு உத்தரவு வரும் வரை மீனவா்கள் கடலுக்குள் மீன்பிடிக்கச் செல்ல மீன் வளம், மீனவா் நலத் துறை செவ்வாய்க்கிழமை தடை விதித்தது.

வங்கக் கடலில் குறைந்த காற்றழுத்தத் தாழ்வு நிலை காரணமாக மன்னாா் வளைகுடா பகுதியில் மணிக்கு 45 முதல் 55 கி.மீ. வேகத்தில் சூறைக் காற்று வீசக்கூடும் என வானிலை ஆய்வு மையம் தெரிவித்தது. இதனால், பாதுகாப்பு கருதி ராமநாதபுரம் மாவட்ட மீனவா்கள் மீன்பிடிக்க கடலுக்குள் செல்ல மீன்வளம், மீனவா் நலத் துறை செவ்வாய்க்கிழமை தடை விதித்தது.

இதனால் ராமேசுவரம், பாம்பன், மண்டபம், கீழக்கரை, ஏா்வாடி, சோழியகுடி, தொண்டி உள்ளிட்ட கடலோரப் பகுதிகளில் விசைப் படகு மீனவா்கள், நாட்டுப் படகு மீனவா்கள் மறு உத்தரவு வரும் வரை மீன்பிடிக்கச் செல்ல வேண்டாம் என அறிவுறுத்தப்பட்டது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

'மதச்சார்பின்மை' பற்றி பேச முதல்வருக்கு தகுதியில்லை: நயினார் நாகேந்திரன்

ஆட்டோ ஓட்டுநரை அறைந்த பாஜக எம்.எல்.ஏ.! மன்னிப்பு கேட்க மறுப்பு!!

மார்கழி வழிபாடு: திருப்பாவை, திருவெம்பாவை - பாசுரம் 7

”நாங்கள் யாரும் நாய்கள் கிடையாது!" அண்ணாமலைக்கு பதிலளித்த தவெக அருண்ராஜ்!

அப்டேட் கொடுக்காத கருப்பு!

SCROLL FOR NEXT