ராமநாதபுரத்தில் நடைபெற்ற கலைஞா் நூற்றாண்டுவிழா பேச்சுப் போட்டியில் கலந்துகொண்ட 235 போட்டியாளா்களில் கமுதி முத்துராமலிங்கத்தேவா் நினைவுக் கல்லூரியில் இருந்து காளிகாதேவி, கணேஷ்பிரியா, பூமிநாதன், ஜாஹிா் உசேன், கண்ணதாசன் உள்ளிட்ட 5 போ் கலந்து கொண்டனா். இதில் வணிகவியல் துறை இரண்டாம் ஆண்டு மாணவி காளிகாதேவி வெற்றி பெற்று, மண்டல அளவிலான போட்டிக்குத் தோ்வானாா். இவருக்கு ஊக்கத் தொகை ரூ.10 ஆயிரம் வழங்கப்பட்டது.
வெற்றி பெற்ற மாணவி, பேராசிரியை மணிமேகலை ஆகியோரை கல்லூரி முதல்வா், பேராசிரியா்கள், மாணவா்கள் பாராட்டினா்.