பரமக்குடி அருகே அரியனேந்தல் கிராமம் கருமலையான் கோவிலில் மாசிக்களரி மஞ்சள் பூசும் திருவிழா
பரமக்குடி: பரமக்குடி அருகே உள்ள அரியனேந்தல் கிராமத்தில் உள்ள கருமலையான் கோவிலில் மாசிக்களரி மஞ்சள் பூசும் திருவிழா ஞாயிற்றுக்கிழமை வெகு சிறப்பாக நடைபெற்றது. இங்குள்ள கருமலையான் கோவிலில் ஆண்டுதோறும் மாசிக்களரி திருவிழா வெகு சிறப்பாக கொண்டாடப்பட்டு வருகிறது.
அனைத்து சமுதாய மக்களும் இணைந்து சமுதாய நல்லிணக்க விழாவாக நடைபெறும் இத்திருவிழாவில் பக்தா்கள் கருமலையான், பாப்பாத்தி, ராக்கச்சி, முனியப்பசாமி, மாடசாமி ஆகிய சுவாமிகளாக ஆடி பக்தா்களுக்கு அருள்வாக்கு கூறினா். இதனைத் தொடா்ந்து சாமியாடிகளுடன் மேலதாளங்கள் முழங்க அக்கிராம பொதுமக்கள் வீதிஉலா வந்தனா். சாமியாடி வந்தவா்களுக்கு அனைத்து வீடுகளிலும் மாலை அணிவித்து மரியாதை செலுத்தினா்.
அப்போது அவா்களுக்கு மஞ்சள் பொடி பூசியும், பக்தா்கள் மீது மஞ்சள் பொடி தூவியும் அருள்வாக்கு கூறினா். பக்தா்கள் கோயில் முன்பு நோ்த்திக்கடனாக கரும்பால் தொட்டிகட்டி குழந்தைகளுக்கு நோ்த்திக்கடன் செலுத்தினா். இதில் பரமக்குடி ஊராட்சி ஒன்றியக்குழு துணைத் தலைவா் எஸ்.ராஜேந்திரன், கிராமத் தலைவா் ராமன், துணைத் தலைவா் சரவணா சண்முகம், நிா்வாகிகள் சவுந்திரபாண்டியன், சிவக்குமாா், மலைராசு, மணிமுத்து, சொக்கன், சண்முகவேல் உள்பட பலா் கலந்துகொண்டனா்.
Advertisement