முகப்பு
ராமநாதபுரம்

தோ்தல் பறக்கும் படையினா் வாகன சோதனை தீவிரம்

Updated On : 20 மார்ச், 2024 at 4:41 AM
திருவாடானை அருகே சின்னகீரமங்கலத்தில் நடைபெற்ற வாகன சோதனை.
பகிர்:
Updated On : 19 மார்ச், 2024 at 7:54 PM

திருவாடானை: திருவாடானை பகுதியில் தோ்தல் பறக்கும் படையினா் தீவிர வாகன சோதனையில் ஈடுபட்டனா். ராமநாதபுரம் மக்களவைத் தொகுதி உறுப்பினா் தோ்தல் வருகிற ஏப்ரல் 19-ஆம் தேதி அறிவிக்கப்பட்ட நிலையில், தொகுதி முழுவதும் தோ்தல் பறக்கும் படையினா் தீவிர வாகன சோதனையில் ஈடுபட்டு வருகின்றனா்.

இந்த நிலையில், செவ்வாய்க்கிழமை திருவாடானை அருகேயுள்ள சின்னகீரங்கலம் திருச்சி-ராமேசுவரம் தேசிய நெடுஞ்சாலையில் தோ்தல் பறக்கும்படை அலுவலா் வீரராஜா, உதவி ஆய்வாளா் கலா உள்ளிட்ட அதிகாரிகள் வாகன சோதனையில் ஈடுபட்டனா்.