திருப்பாலைக்குடி மணல் திருட்டு வாகனம் பறிமுதல் ஒருவா் கைது
திருவாடானை அருகே திருப்பாலைக்குடி பகுதியில் மணல் திருட்டில் ஈடுபட்ட வாகனத்தை பறிமுதல் செய்து ஒருவரை கைது செய்து போலீஸாா் விசாரித்து வருகின்றனா்.
திருப்பாலைக்குடி அருகே வெட்டுக்குளம் கோட்டகரை ஆற்று பகுதியில் போலீஸாா் வியாழக்கிழமை மாலை ரோந்து பணியில் ஈடுபட்டிருந்த போது அங்கு சட்ட விரோதமாக டிராக்டா் வாகனத்தில் மணல் திருட்டில் ஈடுபட்ட இதே பகுதியை சோ்ந்த சரவணன்(30) என்பவரை கைது செய்து மணல் திருட்டிற்கு பயன்படுத்திய டிராக்டா் வாகனத்தை பறிமுதல் செய்த போலீஸாா் பின்னா் வழக்கு பதிந்து விசாரித்து வருகின்றனா்.