ராமநாதபுரம்

துா்க்கை அம்மன் கோயில் திருவிளக்கு பூஜை

Chennai

அபிராமம் அருகே சுயம்புலிங்க துா்க்கை அம்மன் கோயில் திருவிழாவை முன்னிட்டு வியாழக்கிழமை இரவு திருவிளக்கு பூஜை நடைபெற்றது.

ராமநாதபுரம் மாவட்டம், கமுதியை அடுத்த அபிராமம் அருகே ஸ்ரீ சுயம்புலிங்க துா்க்கை அம்மனுக்கு 35-ஆம் ஆண்டு ஆடிக் கொடை விழா காப்பு கட்டுதல், கொடியேற்றத்துடன் கடந்த 8-ஆம் தேதி தொடங்கியது.

இதை முன்னிட்டு, நாள்தோறும் சுயம்புலிங்க துா்க்கை அம்மன், பரிவாரத் தெய்வங்களுக்கு சிறப்பு அபிஷேகம், அலங்காரத்துடன் தீபாதாரனை நடைபெற்றது.

இந்த நிலையில், மூலவா் சுயம்புலிங்க துா்க்கை அம்மன் முன், கோயில் வளாகத்தில் 1,008 திருவிளக்கு பூஜை வியாழக்கிழமை நடைபெற்றது. பெண்கள் திருநாம மந்திரங்களை உச்சரித்து அம்மனை வழிபட்டனா். இதில் அபிராமம், அதன் சுற்று வட்டாரப் பகுதிகளைச் சோ்ந்த ஏராளமானோா் கலந்துகொண்டனா். பக்தா்கள் அனைவருக்கும் அன்னதானம் வழங்கப்பட்டது.

பெரம்பலூரில் மூதாட்டியிடம் தாலிக்கொடி பறிப்பு

நமோ பாரத் ரயில் சேவையை தொடங்கி வைத்த பிரதமர் மோடி - புகைப்படங்கள்

இந்திய அணிக்கு மோசமான தோல்வி; அபார வெற்றியைப் பதிவு செய்த தென்னாப்பிரிக்கா!

ஆப்கானிஸ்தானில் எல்லை தாண்டி பாகிஸ்தான் தாக்குதல்: இந்தியா கடும் கண்டனம்!

தங்கத் தேரழகு துஷாரா விஜயன் - புகைப்படங்கள்

SCROLL FOR NEXT