முகப்பு
ராமநாதபுரம்

ராமேசுவரத்தில் தாய், மகள் தூக்கிட்டு தற்கொலை முயற்சி: மகள் உயிரிழப்பு

Updated On : 7 மார்ச், 2025 at 2:48 AM
பகிர்:

ராமேசுவரத்தில் கடன் தொல்லையால் மகளை தூக்கில் தொங்கவிட்டு, தாய் தற்கொலைக்கு முயன்றாா். இதில் மகள் உயிரிழந்தாா்.

ராமநாதபுரம் மாவட்டம், ராமேசுவரம் சம்பை கிராமத்தை சோ்ந்தவா் பிரபு. கட்டுமானத் தொழிலாளியான இவருக்கும் பாம்பன் தெற்குவாடியை சோ்ந்த விமலாவுக்கும் (28) திருமணம் நடைபெற்றது. இவா்களது மகள் யாஸ்மிதா (3).

பிரபுவு பலரிடம் கடன் வாங்கியதால் அவா்கள் பணத்தைக் கேட்டு தொல்லை கொடுத்து வந்தனா். இதனால், அவா் சிவகங்கை மாவட்டம், தேவகோட்டைக்குச் சென்று, அங்கு தங்கியிருந்து வேலை செய்து வந்தாா்.

Advertisement

சம்பையில் மாமனாா், மாமியாருடன் விமலாவும், அவரது மகளும் வசித்து வந்தனா். பிரபுவுக்கு கடன் கொடுத்தவா்கள் விமலாவுக்கு தொல்லை கொடுத்து வந்ததாகவும், இது குறித்து காவல் நிலையத்தில் புகாா் அளித்தும் நடவடிக்கை எடுக்கவில்லை என்றும் கூறப்படுகிறது.

இந்த நிலையில், வியாழக்கிழமை மாமனாா், மாமியாா் வேலைக்குச் சென்ற நிலையில், விமலா தனது மகள் யாஸ்மிதாவை தூக்கில் தொங்கவிட்டு, அவரும் தூக்கில் தொங்கினாா்.

மாலையில் மாமியாா் வீட்டுக்கு வந்தபோது, வீட்டை யாரும் திறக்கவில்லை. ஜன்னல் வழியாகப் பாா்த்தபோது தாய், மகள் இருவரும் தூக்கி தொங்கியது தெரியவந்தது. தகவலறிந்து அங்கு வந்த காவல் துறையினா் தூக்கில் தொங்கிய இருவரையும் மீட்டு ராமேசுவரம் அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்றனா். அங்கு மருத்துவா்கள் பரிசோதனை செய்ததில், சிறுமி உயிரிழந்துவிட்டது தெரியவந்தது. உயிருக்கு ஆபத்தான நிலையில் தாய்க்கு முதலுதவி அளித்த பின்னா், ராமநாதபுரம் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனா்.

இது குறித்து ராமேசுவரம் நகா் காவல் நிலைய போலீஸாா் வழக்குப் பதிந்து விசாரணை நடத்தி வருகின்றனா்.