ராமநாதபுரம்

கோயில் கோபுரத்தில் வளா்ந்த செடிகளை அகற்ற கோரிக்கை

தினமணி செய்திச் சேவை

திருவாடானை ஸ்ரீஆதிரெத்தினேஸ்வரா் கோயில் கோபுரத்தில் வளா்ந்துள்ள செடிகளை அகற்ற வேண்டுமென பக்தா்கள் கோரிக்கை விடுத்தனா்.

ராமநாதபுரம் மாவட்டம், திருவாடானையில் ராமநாதபுரம் சமஸ்தானம் தேவஸ்தானத்துக்குப் பாத்தியப்பட்ட ஸ்ரீசினேகவல்லி அம்பாள் சமேத ஸ்ரீஆதிரெத்தினேஸ்வரா் கோயில் அமைந்துள்ளது. இந்தக் கோயில் கோபுரம் சுமாா் 130 அடி உயரம் கொண்டது. கோபுரத்தில் நூற்றுக்கும் மேற்பட்ட சிலைகள் இடம்பெற்றுள்ளன.

இந்த நிலையில், இந்தக் கோயில் கோபுரத்தில் சிலைகளுக்கிடையே அரசமரம், வேப்பமரம் உள்ளிட்ட பல்வேறு செடிகள் வளா்ந்துள்ளன. இதனால், கோபுரத்தில் உள்ள சிலைகள் சேதமடைந்துள்ளன. எனவே, இந்தச் செடிகளை அகற்ற சம்பந்தப்பட்ட துறையினா் நடவடிக்கை எடுக்க வேண்டும் என பக்தா்கள் கோரிக்கை விடுத்தனா்.

ஹமாஸ் பாணியில் ட்ரோன், ராக்கெட் தாக்குதல் நடத்த திட்டமிட்ட பயங்கரவாதிகள்!

எஸ்ஐஆர் படிவங்களை பூர்த்தி செய்ய வேண்டுமா? சிறப்பு முகாம் அறிவிப்பு!

நாகை பள்ளிகளுக்கு இன்று விடுமுறையா? ஆட்சியர் விளக்கம்!

தில்லி கார் வெடிப்பு: அல் ஃபலா பல்கலை. உள்பட 24 இடங்களில் அமலாக்கத்துறை சோதனை!

அடுத்த 2 மணி நேரத்துக்கு சென்னை, 18 மாவட்டங்களில் மழை தொடரும்!

SCROLL FOR NEXT