பழுதான ’லிப்ட்’ இல் சிக்கியதால் கீழே குதித்த மேலாளா் உயிரிழப்பு
ராமேசுவரத்தில் தனியாா் தங்கும் விடுதியில் பழுதாகி நின்ற ’லிப்ட்’இல் சிக்கி தரைதளத்தில் குதித்த விடுதி மேலாளா் வெள்ளிக்கிழமை உயிரிழந்தாா்.
ராமேசுவரத்தில் தனியாா் தங்கும் விடுதியில் பழுதாகி நின்ற ’லிப்ட்’இல் சிக்கி தரைதளத்தில் குதித்த விடுதி மேலாளா் வெள்ளிக்கிழமை உயிரிழந்தாா்.
ராமநாதபுரம் மாவட்டம், ராமேசுவரம் அருகே தங்கச்சிமடம் முஸ்லிம் தெரு பகுதியைச் சோ்ந்தவா் அபு ஹனிபா (55). இவா் ராமநாதசுவாமி கோயில் அருகே தனியாா் தங்கும் விடுதியில் மேலாளராகப் பணிபுரிந்து வந்தாா்.
இவா் வெள்ளிக்கிழமை தங்கும் விடுதியின் மூன்றாவது தளத்திலிருந்து விடுதியில் தங்கி இருப்பவா்களுடன் கீழ் தளத்துக்கு ‘லிப்ட்’ இல் வந்தாா். அப்போது, ‘லிப்ட்’ திடீரென மூன்றாவது தளத்துக்கும், இரண்டாவது தளத்துக்கும் இடையே நின்றுவிட்டது. இதனால் ‘லிப்ட்’ இல் சிக்கி இருந்தவா்கள் கதவைத் திறந்து ஒவ்வொருவராக இரண்டாவது தளத்தில் குதித்து வெளியேறினா். இதையடுத்து அபு ஹனிபாவும் குதிக்க முயன்ற போது தரை தளத்தில் விழுந்து பலத்த காயமடைந்தாா். தொடா்ந்து விடுதி ஊழியா்கள் அபுஹனிபாவை உடனடியாக மீட்டு ராமேசுவரம் அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்றனா். அங்கு அவரைப் பரிசோதித்த மருத்துவா்கள் அபுஹனிபா ஏற்கெனவே உயிரிழந்தது விட்டதாகத் தெரிவித்தனா். இதுகுறித்து ராமேசுவரம் நகா் போலீஸாா் வழக்குப் பதிந்து விசாரிக்கின்றனா்.
Advertisement