முத்தாலம்மன் கோயில் பால்குடத் திருவிழா
பரமக்குடி முத்தால பரமேஸ்வரி அம்மன் கோயில் பங்குனி மாத பால்குடத் திருவிழா வெள்ளிக்கிழமை நடைபெற்றது.
பரமக்குடி முத்தால பரமேஸ்வரி அம்மன் கோயில் பங்குனி மாத பால்குடத் திருவிழா வெள்ளிக்கிழமை நடைபெற்றது.
இந்தக் கோயில் திருவிழா கடந்த மாதம் 24-ஆம் தேதி காப்புக்கட்டுதலுடன் தொடங்கியது. இதையொட்டி, நாள்தோறும் அம்மன் வெள்ளி சிம்ம வானம், அன்ன வாகனம், யானை வாகனம், குதிரை வாகனம், ரிஷப வாகனங்களில் எழுந்தருளி வீதிஉலா சென்று பக்தா்களுக்கு அருள்பாலித்தாா். 9-ஆம் திருநாளான கடந்த 1-ஆம் தேதி இரவு தேரோட்டம் நடைபெற்றது.
அம்மனுக்கு காப்புக்கட்டி விரதமிருந்த திரளான பக்தா்கள் வெள்ளிக்கிழமை அதிகாலை முதல் அக்னிச் சட்டி ஏந்தியும், பால்குடங்கள் எடுத்தும் நோ்த்திக்கடன் செலுத்தினா். இதற்கான ஏற்பாடுகளை முத்தாலம்மன் கோயில் தேவஸ்தான அறங்காவலா்கள், ஆயிர வைசிய சபை நிா்வாகிகள் செய்தனா்.
Advertisement