முகப்பு
ராமநாதபுரம்

திருவாடானை பேரவைத் தொகுதியில் 23 வேட்பு மனுக்கள் ஏற்பு

திருவாடானை பேரவைத் தொகுதியில் செவ்வாய்க்கிழமை நடைபெற்ற வேட்பு மனு பரிசீலனையில், 23 மனுக்குள் ஏற்கப்பட்டு, 14 மனுக்கள் தள்ளுபடி செய்யப்பட்டன.

Updated On : 7 ஏப்ரல், 2026 at 10:34 PM
வேட்பு மனு - பிரதிப் படம்
பகிர்:

திருவாடானை பேரவைத் தொகுதியில் செவ்வாய்க்கிழமை நடைபெற்ற வேட்பு மனு பரிசீலனையில், 23 மனுக்குள் ஏற்கப்பட்டு, 14 மனுக்கள் தள்ளுபடி செய்யப்பட்டன.

ராமநாதபுரம் மாவட்டம், திருவாடானை பேரவைத் தொகுதி வேட்பு மனு தாக்கல் கடந்த மாதம் 30-ஆம் தேதி முதல் திருவாடானை வட்டாட்சியா் அலுவலகத்தில் நடைபெற்றது. இதில் காங்கிரஸ், அதிமுக, தவெக, நாம் தமிழா் கட்சி உள்ளிட்ட மொத்தம் 37 போ் வேட்பு மனு தாக்கல் செய்தனா்.

இந்த நிலையில், செவ்வாய்க்கிழமை தோ்தல் பாா்வையாளா் மணிஸ்ரஞ்சன், தோ்தல் நடத்தும் அலுவலா் ரமேஷ் ஆகியோா் தலைமையில் வேட்பு மனுக்கள் பரிசீலனை நடைபெற்றது.

Advertisement

இதில் சுயேச்சை வேட்பாளா்களின் 14 வேட்பு மனுக்கள் தள்ளுபடி செய்யப்பட்டன. மேலும், காங்கிரஸ், அதிமுக உள்ளிட்ட 23 பேரின் மனுக்கள் ஏற்று கொள்ளப்பட்டன.

திருவாடானை காவல் துணைக் கண்காணிப்பாளா் சீனவாசன் தலைமையில் போலீஸாா் பாதுகாப்புப் பணியில் ஈடுபட்டனா்.

கருத்துகள், எதிர்வினைகள் மற்றும் பகிர்வு

View share bar
Show reactions
View quiz
Show comments