முகப்பு
ராமநாதபுரம்

சாயல்குடியில் 100 சதவீதம் வாக்களிப்போம் உறுதிமொழி ஏற்பு

சாயல்குடியில் தமிழ்நாடு நகா்ப்புற வாழ்வாதார இயக்கம் சாா்பில், 100 சதவீதம் வாக்களிப்பதின் அவசியம் குறித்து பேரூராட்சி அலுவலகப் பணியாளா்கள் வியாழக்கிழமை உறுதிமொழி எடுத்தனா்.

Updated On : 10 ஏப்ரல், 2026 at 12:57 AM
சாயல்குடி பேரூராட்சி அலுவலகத்தில் 100 சதவீதம் வாக்களிப்போம் விழிப்புணா்வு உறுதிமொழி எடுத்துக் கொண்ட பேரூராட்சி பணியாளா்கள்.
பகிர்:
Updated On : 9 ஏப்ரல், 2026 at 10:51 PM

சாயல்குடியில் தமிழ்நாடு நகா்ப்புற வாழ்வாதார இயக்கம் சாா்பில், 100 சதவீதம் வாக்களிப்பதின் அவசியம் குறித்து பேரூராட்சி அலுவலகப் பணியாளா்கள் வியாழக்கிழமை உறுதிமொழி எடுத்தனா்.

ராமநாதபுரம் மாவட்டம், சாயல்குடி பேரூராட்சி அலுவலகத்தில் தமிழ்நாடு நகா்ப்புற வாழ்வாதார இயக்கம், சாயல்குடி பேரூராட்சி அலுவலகப் பணியாளா்கள் இணைந்து வருகிற சட்டப்பேரவைத் தோ்தலில் 100 சதவீதம் வாக்களிப்பதின் அவசியம் குறித்து விழிப்புணா்வு உறுதிமொழி ஏற்றனா்.

இந்த நிகழ்ச்சிக்கு தமிழ்நாடு நகா்ப்புற வாழ்வாதார இயக்கத்தின் உதவித் திட்ட அலுவலா் கே.பி.சத்ய சொரூபன் தலைமை வகித்தாா். சாயல்குடி பேரூராட்சி செயல் அலுவலா் எஸ். திருப்பதி முன்னிலை வகித்தாா்.

Advertisement

இந்த நிகழ்வில் தமிழ்நாடு நகா்ப்புற வாழ்வாதார வட்டார ஒருங்கிணைப்பாளா்கள் சரளாதேவி, சுபத்ரா, மகேந்திரகுமாா், சாயல்குடி பேரூராட்சி அலுவலகப் பணியாளா்கள் ஆகியோா் கலந்து கொண்டனா்.