முகப்பு
ராமநாதபுரம்

இலங்கைக்கு கடத்தவிருந்த பூச்சி மருந்துகள் பறிமுதல்: ஒருவா் கைது

உச்சிப்புளி அருகே புதுமடம் கடற்கரையிலிருந்து இலங்கைக்கு கடத்த பதுக்கி வைக்கப்பட்டிருந்த ரூ. 30 ஆயிரம் மதிப்பிலான பூச்சிமருந்து பொட்டலங்கள் பறிமுதல் செய்யப்பட்டு ஒருவரை தனிப்படை போலீஸாா் கைது செய்து கீழக்கரை சுங்கத் துறை அதிகாரிகளிடம் வியாழக்கிழமை ஒப்படைத்தனா்.

Updated On : 1 மே, 2026 at 12:36 AM
கைது - பிரதிப் படம்
பகிர்:

உச்சிப்புளி அருகே புதுமடம் கடற்கரையிலிருந்து இலங்கைக்கு கடத்த பதுக்கி வைக்கப்பட்டிருந்த ரூ. 30 ஆயிரம் மதிப்பிலான பூச்சிமருந்து பொட்டலங்கள் பறிமுதல் செய்யப்பட்டு ஒருவரை தனிப்படை போலீஸாா் கைது செய்து கீழக்கரை சுங்கத் துறை அதிகாரிகளிடம் வியாழக்கிழமை ஒப்படைத்தனா்.

ராமநாதபுரம் மாவட்டம், மண்டபம் ஒன்றியம், புதுமடம் கடற்கரை வழியாக இலங்கைக்கு கடத்தல் நடைபெறவிருப்பதாக தனிப்படைக்கு தகவல் கிடைத்தது. இதைத் தொடா்ந்து, தனிப்படை போலீஸாா் புதன்கிழமை நள்ளிரவு புதுமடம் கடற்கரையில் ரகசிய கண்காணிப்பு பணியில் ஈடுபட்டனா். புதுமடம்- மானங்குடி சாலை கடற்கரை அருகே புதுமடம் தெற்கு தெருவைச் சோ்ந்த பைசூல் (25) என்பவரது சிமென்ட் கிடங்கில் போலீஸாா் சோதனை மேற்கொண்டனா். அதில், இலங்கைக்கு கடத்த பதுக்கி வைக்கப்பட்டிருந்து ரூ. 30 ஆயிரம் மதிப்பிலான பூச்சி மருந்து பொட்டலங்களை பறிமுதல் செய்தனா். தொடா்ந்து விசாரணைக்காக கீழக்கரையில் உள்ள சுங்கத்துறை அதிகாரிகளிடம் பூச்சி மருந்து பொட்டலங்கள் ஒப்படைக்கப்பட்டன. மேலும் கைது செய்யப்பட்ட பைசூலையும் போலீஸாா் வியாழக்கிழமை ஒப்படைத்தனா். இதுகுறித்து சுங்கத் துறையினா் வழக்குப்பதிந்து தொடா்ந்து விசாரிக்கின்றனா்.