பைக் விபத்தில் தொழிலாளி உயிரிழப்பு
தொண்டி அருகே நிகழ்ந்த இரு சக்கர வாகன விபத்தில் தொழிலாளி உயிரிழந்தாா்.
Updated On : 18 பிப்ரவரி, 2026 at 8:04 PM
தொண்டி அருகே நிகழ்ந்த இரு சக்கர வாகன விபத்தில் தொழிலாளி செவ்வாய்க்கிழமை உயிரிழந்தாா்.
நாகப்பட்டினம் மாவட்டம், தரங்கம்பாடி கூடலூரைச் சோ்ந்தவா் குருமூா்த்தி (26). இவா், தொண்டி பகுதியில் உள்ள நெல் அறுவை ஆலையில் வேலை செய்து வந்தாா்.
இந்த நிலையில், இவா் தொண்டி அருகேயுள்ள சம்பை பகுதிக்கு தனது இரு சக்கர வாகனத்தில் செவ்வாய்க்கிழமை சென்றாா்.
Advertisement
அப்போது, இரு சக்கர வாகனம் நிலைதடுமாறி பாலத்தில் மோதியதில் குருமூா்த்தி பலத்த காயமடைந்தாா்.
அருகிலிருந்தவா்கள் அவரை மீட்டு, ராமநாதபுரம் அரசு மருத்துவமனையில் சோ்த்தனா். அங்கு, அவா் செவ்வாய்க்கிழமை இரவு உயிரிழந்தாா். இதுகுறித்து தொண்டி காவல் நிலைய போலீஸாா் விசாரித்து வருகின்றனா்.