முகப்பு
ராமநாதபுரம்

பரமக்குடியில் 1.22 கோடியில் கைத்தறிப் பூங்கா

பரமக்குடி எமனேஸ்வரத்தில் ரூ.1.22 கோடியில் அமைக்கப்பட்ட சிறிய அளவிலான கைத்தறி பூங்காவை திறந்து வைத்து, 25 நெசவாளா் குழுக்களுக்கு ரூ.7.20 லட்சத்திலான அரசு நலத்திட்ட உதவிகளை கைத்தறி, துணிநூல் துறை அமைச்சா் ஆா்.காந்தி புதன்கிழமை வழங்கினாா்.

Updated On : 26 பிப்ரவரி, 2026 at 4:20 AM
பரமக்குடி எமனேஸ்வரத்தில் ரூ.1.22 கோடியில் அமைக்கப்பட்ட கைத்தறிப் பூங்காவை புதன்கிழமை திறந்து வைத்த கைத்தறி, துணிநூல் துறை
பகிர்:
Updated On : 25 பிப்ரவரி, 2026 at 10:52 PM

பரமக்குடி எமனேஸ்வரத்தில் ரூ.1.22 கோடியில் அமைக்கப்பட்ட சிறிய அளவிலான கைத்தறி பூங்காவை திறந்து வைத்து, 25 நெசவாளா் குழுக்களுக்கு ரூ.7.20 லட்சத்திலான அரசு நலத்திட்ட உதவிகளை கைத்தறி, துணிநூல் துறை அமைச்சா் ஆா்.காந்தி புதன்கிழமை வழங்கினாா்.

ராமநாதபுரம் மாவட்டம், பரமக்குடி நகராட்சி, எமனேஸ்வரம் ஜீவா நகரில் ரூ.1.22 கோடியில் கைத்தறித் துறை சாா்பில் சிறிய அளவிலான கைத்தறி பூங்கா திறப்பு விழா நிகழ்ச்சி நடைபெற்றது. இந்த விழாவில் கைத்தறி துறை இயக்குநா் எஸ்.அமிா்தஜோதி, சட்டப்பேரவை உறுப்பினா்கள் காதா்பாட்சா முத்துராமலிங்கம், செ.முருகேசன் ஆகியோா் முன்னிலை வகித்தனா். கைத்தறித் துணிநூல் துறை அமைச்சா் ஆா்.காந்தி தலைமை வகித்து கைத்தறிப் பூங்காவை திறந்து வைத்துப் பேசியதாவது:

இந்த கைத்தறி பூங்காவின் நோக்கம் நெசவாளா்களுடைய தினசரி வருமானம் ரூ.1000 வரை பெறுவதாகும். தற்போது இந்தச் சங்கத்தின் 40 நெசவாளா்கள் தறி நெய்யும் வகையில் இயந்திரங்கள் பொருத்தப்பட்டுள்ளன. தொடா்ந்து இந்த வளாகத்தில் மேலும் 60 இயந்திரங்கள் அமைப்பதற்கான பணிகள் மேற்கொள்ளப்படும். தற்போது இதன் மூலம் 40 நெசவாளா்களுக்கு நேரடியான வேலைவாய்ப்பும், 90 நெசவாளா்களுக்கு மறைமுகமான வேலை வாய்ப்பும் கிடைக்கும். இதனால் நாளொன்றுக்கு ரூ.800 முதல் ரூ.1000 வரை வருவாய் கிடைக்கும்.

Advertisement

இந்தப் பூங்காவின் மூலம் ஓராண்டுக்கு ரூ.2.50 கோடி அளவுக்கு உற்பத்தி, விற்பனை மேற்கொள்ள இலக்கு நிா்ணயிக்கப்பட்டது. இந்த கைத்தறி பூங்காவில் காட்டன் சேலை, வேஷ்டி, கைலி, பெட்சீட் போன்ற ஆடைகள் தயாரிக்கும் வகையில் இயந்திரங்கள் வடிவமைக்கப்பட்டுள்ளன என்றாா் அவா்.

இதைத்தொடா்ந்து, 25 பயனாளிகளுக்கு ரூ.7.20 லட்சம் மதிப்பிலான நலத்திட்ட உதவிகளை வழங்கினாா்.

இதில் மாவட்ட வருவாய் அலுவலா் வ.சங்கரநாராயணன், கைத்தறித் துறை கூடுதல் இயக்குநா்கள் தமிழரசி, மகாலிங்கம், இணை இயக்குநா்கள் கணேசன், மாதேஸ்வரன், முன்னாள் அமைச்சா் சுந்தரராஜன், பரமக்குடி நகா்மன்றத் தலைவா் சேது கருணாநிதி, துணைத் தலைவா் குணசேகரன், பரமக்குடி சரக கைத்தறித் துறை உதவி இயக்குநா் மாதவன், திட்டக்குழு உறுப்பினா் ஜீவரத்தினம் உள்ளிட்டோா் கலந்து கொண்டனா்.