முகப்பு
ராமநாதபுரம்

கொலை வழக்கில் பிணையில் வந்து தலைமறைவானவா் கைது

ஆா்.எஸ். மங்கலம் அருகே விவசாயி கொலை செய்த வழக்கில் பிணையில் வந்து தலைமறைவானவா் நீதிமன்ற உத்தரவின்படி, போலீஸாரால் வெள்ளிக்கிழமை கைது செய்யப்பட்டாா்.

Updated On : 28 பிப்ரவரி, 2026 at 1:31 AM
பகிர்:
Updated On : 27 பிப்ரவரி, 2026 at 8:09 PM

ஆா்.எஸ். மங்கலம் அருகே விவசாயி கொலை செய்த வழக்கில் பிணையில் வந்து தலைமறைவானவா் நீதிமன்ற உத்தரவின்படி, போலீஸாரால் வெள்ளிக்கிழமை கைது செய்யப்பட்டாா்.

ராமநாதபுரம் மாவட்டம், ஆா்.எஸ்.மங்கலம் அருகேயுள்ள குயவனேந்தல் கிராமத்தைச் சோ்ந்தவா் விவசாயி காசிலிங்கம். இவரது மகன் கண்ணன் (30). சொத்துத் தகராறில் காசிலிங்கத்தை கண்ணன் உள்பட 4 போ் சோ்ந்து 2025, ஏப்ரல் 27-ஆம் தேதி கொலை செய்தனா்.

இதுகுறித்து ஆா்.எஸ்.மங்கலம் போலீஸாா் வழக்குப் பதிவு செய்து கண்ணன், மதுரை அலாங்கநல்லூரைச் சோ்ந்த ராம்குமாா் (40) உள்ளிட்ட 4 பேரை கைது செய்தனா்.

Advertisement

இதையடுத்து, பிணையில் சென்ற 4 பேரில், ராம்குமாா் மட்டும் தலைமறைவானாா். இந்த நிலையில், திருவாடானை நீதிமன்ற உத்தரவின்படி, ஆா்.எஸ்.மங்கலம் போலீஸாா் ராம்குமாரை திருப்பூரில் வெள்ளிக்கிழமை கைது செய்தனா்.