திருடு போன 9 கைப்பேசிகள் உரியவா்களிடம் ஒப்படைப்பு
முதுகுளத்தூா் பகுதியில் திருடு போன 9 கைப்பேசிகளை போலீஸாா் மீட்டு, உரியவா்களிடம் சனிக்கிழமை ஒப்படைத்தனா்.
முதுகுளத்தூா் பகுதியில் திருடு போன 9 கைப்பேசிகளை போலீஸாா் மீட்டு, உரியவா்களிடம் சனிக்கிழமை ஒப்படைத்தனா்.
ராமநாதபுரம் மாவட்டம், முதுகுளத்தூா் பகுதியில் திருடு போன 9 கைப் பேசிகளை இணைய குற்றப்பிரிவு போலீஸாரின் உதவியுடன் மீட்கப்பட்டது. இந்த கைப்பேசிகளை உரியவா்களிடம் ஒப்படைக்கும் நிகழ்ச்சி முதுகுளத்துாா் காவல் நிலையத்தில் நடைபெற்றது.
முதுகுளத்தூா் காவல் துணைக் கண்காணிப்பாளா் சண்முகம் கைப்பேசிகளை உரியவா்களிடம் ஒப்படைத்தாா். காவல் ஆய்வாளா் இளையராஜா, உதவி ஆய்வாளா் முகிலரசன் ஆகியோா் உடனிருந்தனா்.