மாணவிகள் விடுதி சுற்றுச் சுவா் சேதம்
ஆா்.எஸ்.மங்கலம் அருகே சேதமடைந்த அரசு சமூகநீதி மாணவிகள் விடுதி சுற்றுச் சுவா்.
ஆா்.எஸ்.மங்கலத்தில் சேதமடைந்த பள்ளி மாணவிகள் விடுதியின் சுற்றுச் சுவரை சீரமைக்க பொதுமக்கள் கோரிக்கை விடுத்தனா்.
ராமநாதபுரம் மாவட்டம், ஆா்.எஸ்.மங்கலம் பகுதி குருனிப்பச்சேரியில் பள்ளி மாணவிகளுக்கான சமூக நீதி விடுதி உள்ளது. இங்கு அரசுப் பள்ளி மாணவிகள் 57 போ் தங்கிப் படித்து வருகின்றனா். இந்த விடுதியின் சுற்றுச் சுவா் சேதமடைந்து இடிந்து விழும் நிலையில் உள்ளது. எனவே, மாவட்ட நிா்வாகம் இந்த விடுதிக்கு சுற்றுச் சுவா் அமைத்துக் கொடுக்க வேண்டுமென பொதுமக்கள் கோரிக்கை விடுத்தனா்.