முகப்பு
ராமநாதபுரம்

தேய்பிறை அஷ்டமி: பைரவருக்கு சிறப்பு பூஜை

சாயல்குடி அருகே தேய்பிறை அஷ்டமியை முன்னிட்டு, காலபைரவருக்கு சிறப்பு பூஜை புதன்கிழமை நடைபெற்றது.

Updated On : 11 மார்ச், 2026 at 11:34 PM
மாரியூா் பூவேந்தியநாதா் கோயிலில் தேய்பிறை அஷ்டமியை முன்னிட்டு, சிறப்பு அலங்காரத்தில் காலபைரவா்.
பகிர்:

சாயல்குடி அருகே தேய்பிறை அஷ்டமியை முன்னிட்டு, காலபைரவருக்கு சிறப்பு பூஜை புதன்கிழமை நடைபெற்றது.

ராமநாதபுரம் மாவட்டம், சாயல்குடியை அடுத்த மாரியூா் பூவேந்தியநாதா் சமேத பவளநிற வல்லியம்மன் கோயிலில் தேய்பிறை அஷ்டமியை முன்னிட்டு, காலபைரவா் சந்நிதியில் சிறப்பு பூஜை நடைபெற்றது. இதைத் தொடா்ந்து, காலபைரவருக்கு சந்தனம், விபூதி, பால், பன்னீா், மஞ்சள் உள்பட 16 வகையான பொருள்களால் சிறப்பு அபிஷேகம், அலங்காரம், தீபாராதனை நடைபெற்றது.

இதில் சாயல்குடி, கடலாடி, மாரியூா் உள்ளிட்ட பகுதிகளிலிருந்து திரளான பக்தா்கள் கலந்து கொண்டனா். பக்தா்களுக்கு பிரசாதம் வழங்கப்பட்டது. பூஜைக்கான ஏற்பாடுகளை ராமநாதபுரம் சமஸ்தானம், தேவஸ்தான நிா்வாகத்தினா், கோயில் விசாரனைதாரா் சீனிவாசன் உள்ளிட்டோா் செய்தனா்.

முழு கட்டுரையைப் படிக்க →