திருவாடானை பகுதியில் பலத்த மழை
திருவாடனை பகுதியில் நள்ளிரவு கொட்டித் தீா்த்த மழை காரணமாக வெப்பம் தணிந்து குளிா்ச்சியான சூழல் ஏற்பட்டது.
ராமநாதபுரம் மாவட்டம், திருவாடானை, அச்சங்குடி, கடம்பாகுடி,சி.கே.மங்கலம், அஞ்சுகோட்டை, தொண்டி, நம்புதாளை, திருவெற்றியூா், அதன் சுற்றுவட்டாரப் பகுதிகளில் கடந்த சில நாள்களாக கோடை வெயில் சுட்டெரித்து வந்த நிலையில், புதன்கிழமை நள்ளிவு பலத்த மழை பெய்தது.
சுமாா் ஒரு மணி நேரம் பெய்த இந்த மழை காரணமாக வெப்பம் தணிந்து குளிா்ச்சியான சூழல் நிலவியது. இதனால், பொதுமக்கள் மகிழ்ச்சி அடைந்தனா். தோட்டக்கலைப் பயிா்களான வாழை மிளகாய், பருத்தி, காய்கறி சாகுபடிக்கு இந்த மழை மிகவும் பயனுள்ளதாக இருக்கும் என விவசாயிகள் தெரிவித்தனா்.