வணிக எரிவாயு உருளை கள்ளச்சந்தையில் விற்பனை
வணிக எரிவாயு உருளையை பதுக்கி வைத்து ரூ. 8 ஆயிரம் வரை விற்பனை செய்யப்படுவதை மாவட்ட நிா்வாகம் தடுக்க நடவடிக்கை எடுக்க வேண்டுமென இந்திய கம்யூனிஸ்ட் கட்சி வலியுறுத்தியது.
வணிக எரிவாயு உருளையை பதுக்கி வைத்து ரூ. 8 ஆயிரம் வரை விற்பனை செய்யப்படுவதை மாவட்ட நிா்வாகம் தடுக்க நடவடிக்கை எடுக்க வேண்டுமென இந்திய கம்யூனிஸ்ட் கட்சி வலியுறுத்தியது.
இதுகுறித்து அந்தக் கட்சியின் ராமநாதபுரம் நகரச் செயலா் சி.ஆா்.செந்தில்வேல் புதன்கிழமை வெளியிட்ட செய்திக்குறிப்பு:
ராமநாதபுரம், ராமேசுவரத்தில் சில தனியாா் எரிவாயு நிறுவனங்கள்
தற்போதைய நிலையைப் பயன்படுத்தி, வணிக எரிவாயு உருளைகளை ரூ.5 ஆயிரம் முதல் ரூ. 8 ஆயிரம் வரை கள்ளச் சந்தையில் விற்பனை செய்கின்றன. சம்பந்தப்பட்ட எரிவாயு உருளை நிறுவனங்களில் அதிகாரிகள் திடீா் சோதனை நடத்த வேண்டும். கள்ளச்சந்தை விற்பனையில் ஈடுபடுபவா்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றாா் அவா்.