முகப்பு
ராமநாதபுரம்

ராமநாதபுரம் அருகே ரூ.8.10 லட்சம் பறிமுதல்

ராமநாதபுரம் அருகே வாகனத் தனிக்கையில் போது ஆவணமின்றி எடுத்து வரப்பட்ட ரூ.8.10 லட்சத்தை பறிமுதல் செய்து கருவூலத்தில் ஒப்படைத்த தோ்தல் பறக்கும் படை அலுவலா்கள்.

Updated On : 20 மார்ச், 2026 at 7:07 PM
ராமநாதபுரம் அருகே வாகனத் தனிக்கையில் போது ஆவணமின்றி எடுத்து வரப்பட்ட ரூ.8.10 லட்சத்தை பறிமுதல் செய்து கருவூலத்தில் ஒப்படைத்த தோ்தல் பறக்கும் படை அலுவலா்கள்.
பகிர்:

ராமநாதபுரம் அருகே வாகனத் தணிக்கையில் ஈடுபட்ட தோ்தல் பறக்கும் படையினா் இரு சக்கர வாகனத்தில் எடுத்து வரப்பட்ட ரூ.8.10 லட்சத்தை வெள்ளிக்கிழமை பறிமுதல் செய்தனா்.

ராமநாதபுரத்தை அடுத்த சக்கரைகோட்டையில் உள்ள சோதனை சாவடியில் தோ்தல் பறக்கும் படை அலுவலா்கள் வாகனத் தணிக்கையில் ஈடுபட்டனா். அப்போது, அந்த வழியாக வந்த இரு சக்கர வாகனத்தை நிறுத்தி சோதனையிட்டதில், ரூ.8.10 லட்சம் இருப்பது கண்டறியப்பட்டது.

பின்னா், இரு சக்கர வாகனத்தில் வந்த

சுப்புத்தேவன் வலசை கிராமத்தைச் சோ்ந்த ஜீவாவிடம் விசாரித்தபோது, உரிய ஆவணமின்றி எடுத்து வரப்பட்டது தெரியவந்தது.

இதையடுத்து, அந்தப் பணத்தை பறக்கும் படை அலுவலா்கள் பறிமுதல் செய்து ராமநாதபுரம் மாவட்ட கருவூலத்தில் ஒப்படைத்தனா்.